Friday, October 2, 2020

காயத்ரி (GAYATHRI ) என்ற பெயர்அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                                       

                                             காயத்ரி (GAYATHRI ) என்ற பெயர்                                           

காயத்ரி (GAYATHRI ) என்ற பெயர் குருவின் ஆதிக்கத்தை ஆரம்ப எழுத்தாக கொண்ட பெயராகும் . இது ரிஷப ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட சந்திரனின் குணத்தையும் வெளிப்படுத்தும் பெயராகும் . மேலும்  சந்திரனின் உச்ச பலம் பெற்ற பெயராகும் . எகிப்திய வரைபடங்களில் -  மந்திர நூல்களில் சிவசக்தி என்றும் பலப்பரீட்சை  என்று இந்த பெயரின் ஹீப்ரு எண்   பற்றி  கூறப்பட்டுள்ளது .  இந்த பெயரின் ஹீப்ரு எண் இரண்டு முறை சூரிய ஆதிக்க எண் வந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது . சாமர யோகம் என்ற ஒருவகையான யோகத்தை கொண்ட இந்த பெயர் அமைப்பாகும் மனவலிமை உடல் வலிமை தன்னம்பிக்கை போன்றவற்றை தரக்கூடியது .  

ஜோதிட சாஸ்திரத்தில் 11 கரணங்கள்  கொடுக்கப்பட்டு ஐந்து அங்கங்களில் கரணம் தப்பினால் மரணம் என்று அறிவுறுத்தப்படுகிறது . நட்பு  - கூட்டு ஒப்பந்தங்களில்  அளவு  கடந்த   சோதனைகள் -  வஞ்சக மனிதர்களால் ஏற்படக்கூடும் . தெய்வ நம்பிக்கை அதிகமாக ஏற்பட்டு அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் . நம்பிக்கையாளர்களால் ஏமாற்றமும் இந்த பெயருக்கு உண்டாக கூடும் .   


வாழ்க்கையில் பல விதமான சோதனைகளால் ஆபத்துகள் வரும்பொழுது எல்லாம்  ஆன்மீக நம்பிக்கையால் வென்று பல   வித  லாபங்களை  சுலபமாக அடைய சந்தர்ப்பம் உதவி புரியும் . 

உத்தியோகத்தில் தலைமை  பதவிகளையும் - புத்திர பாக்கியங்களையும் தரும் வலிமை கொண்டது .  

பிறந்த தேதி - 9 - 18 - 27 க வருபவர்களுக்கும் - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  9 க வருபவர்களுக்கு  காயத்ரி (GAYATHRI ) என்ற பெயர் வாழ்க்கையில் நல்ல பலன்களை கொடுக்காது . 

பிறந்த தேதிக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையில் அதிர்ஷ்ட பெயர் திருத்தத்தின் மூலம் இந்த காயத்ரி (GAYATHRI ) என்ற பெயரை சிறு திருத்தம் செய்து கொள்வதின் மேலே சொன்ன கெட்ட பலன்களில் இருந்து விடுபட்டு மூலம் வாழ்க்கையில் வளம் காணலாம் . 

நல்லது நடக்க சிறப்பு பரிகாரம் 

சித்தர்கள் 18 பேரில் உரோமரிஷி சந்திர கிரகத்தை பிரதிபலிப்பவர் 

காயத்ரி (GAYATHRI ) என்ற பெயரின்  ஹீப்ரு எண் சந்திரனின் ஆதிக்கத்தில் இருந்து பாதிக்கப்பட்டு இருப்பதால் அதிஷ்ட முறையில் திருத்தம் செய்யப்பட்ட (GAYATHRI ) என்ற பெயரை ஒரு காகிதத்தில் எழுதி   பூஜை அறையில் அறையில் வைத்து பின்பு இவரின் திருவப்படத்தின் முன்பு  ஐந்து முக விளக்கேற்றி உரோமரிஷி முனிவரை மனதில் நினைத்து 


கயிலாயத்தில் வசிப்பவரே போற்றி 
ஜடாமுடி பிரியரே போற்றி 

சந்திரனை தரிசிப்பவரே போற்றி 
சிவசக்தியாக தோன்றுபவரே போற்றி 

நந்தி தேவரால் காப்பாற்றபடுபவரே  போற்றி 
சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி 

சங்கீத பிரியரே போற்றி 
தடைகளை நீக்குபவரே பற்றி 

காகபுஜண்டரால் பூஜிக்கப்படுபவரே போற்றி 
மகாலட்சுமியின் அருளை பெற்றவரே போற்றி 

முருக பெருமானை வணங்குபவரே போற்றி 
உலகத்தை காப்பாற்றுபவரே போற்றி 

சூரியன் போல் காட்சி அளிப்பவரே போற்றி 
காலத்தை கடந்தவாறே போற்றி 

தெய்வீக சித்தரே போற்றி 
கைலாயத்தில் வாசம் செய்யும் 
ஸ்ரீ உரோமரிஷி முனியே போற்றி போற்றி 

என்ற 16  போற்றிகளை கூறிய பின்பு 

இவரின் மூல மந்திரமான 

ஓம் ஸ்ரீ உரோம ரிஷி 
முனி சித்தர் சுவாமியே போற்றி போற்றி 

என்று 108 முறை ஜெபித்து அதிர்ஷ்ட முறையில் திருத்தம் செய்யப்பட்ட செய்யப்பட்ட காயத்ரி (GAYATHRI ) என்ற பெயரை அதிர்ஷ்ட எண்ணின் எண்ணிக்கையில் எழுதிவர இவர்களின் வாழ்க்கை - எதிர்காலம் பிரகாசமாக அமையும் . 

இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து பூஜித்தால் நினைத்த காரியம் நிறைவேறும் . இவரை திங்கள் கிழமையில் வழிபட்டால் விஷேஷ பலன்கள் கிடைக்கும் . 

பூஜைக்கு நிவேதனமாக இஞ்சி இல்லாமல் மிளகு சீரகம் கலந்து குழைவாக செய்த வெண்பொங்கல் பழங்கள் தண்ணீர் வைக்கவேண்டும் . பின்பு உங்கள் பிரார்த்தனையை மனமுருக கூற வேண்டும் . 

நிறைவாக தீப ஆராதனை செய்யவேண்டும் . 

இவ்வாறு செய்வதன் மூலம் அதிர்ஷ்ட முறையில் திருத்தம் செய்யப்பட்ட காயத்ரி (GAYATHRI ) என்ற பெயருக்குண்டான தீய பலன்கள் அனைத்தும் விலகி இவர்களின் வாழ்க்கை அனைத்து விதத்திலும் பிரகாசமாகவும் அதிர்ஷ்டகரமாகவும் அமையும் . 


பரிகாரம் : 1

பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இஷ்ட சித்தியாகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் சகல தோஷங்களும் நீங்கும் .  

பரிகாரம் : 3 

ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு எட்டரை மணியளவில் ஒரு சதுர கெஜம் பரப்பளவு உள்ள இடத்தை மெழுகி கோலம் இட்டு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழம் பொங்கல் அல்லது பாயசம் வைத்து சந்திர பகவானுக்கு வைத்து படைத்து பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை மக்களுக்கு விநியோகம் செய்தும் , தாமும் தமது குடும்பத்தாரும் உண்ணவேண்டும் , ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இவ்வாறு செய்து வந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் போகும் .






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment