Friday, October 2, 2020

வாஸ்துவுக்கு உரிய நாட்கள் எவை என்பதை சொல்லுங்கள் ஐயா ? அதிர்ஷ்ட வாஸ்து சாஸ்திர நிபுணர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித நிபுணர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் ஆர். இராவணன் BSC

                                         பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 


வாஸ்து கடவுள் வருடத்திற்கு 8 நாட்கள் கண்விழித்திருக்கின்றார் . கண்விழித்தவுடன் 5 விதமான காரியங்களை செய்கின்றார் . அவர் கண்விழித்து  முதல் மூன்றே முக்கால் நாழிகை கழித்து மீண்டும் நித்திரைக்கு செல்வார் . இதை மணிக்கணக்கில் எடுத்துக் கொள்வதென்றால் ஒன்றரை மணி நேரம் கண் விழித்திருக்கின்றார் . 

இதில் முதல் முக்கால் நாழிகை தந்ததாவனம் செய்கின்றார் . அதாவது பல் துலக்குகின்றார் .

இரண்டாவது முக்கால் நாழிகை ஸ்நானம் செய்கின்றார் . அதாவது குளிக்கின்றார் . 

மூன்றாவது முக்கால் நாழிகை பூஜை செய்கின்றார் . 

நான்காவது முக்கால் நாழிகை போஜனம் செய்கின்றார் . 

ஐந்தாவது முக்கால் நாழிகை தாம்பூலம் தரிக்கின்றார் .

அதன் பின் இவர் நித்திரைக்கு செல்வார் . இதில் முதல் இரண்டேகால் நாழிகை கழித்து அதன் பின் வாஸ்து கடவுளை பூஜிக்க வேண்டும் . அதாவது நித்திரை செல்வதற்கு முன் சரியாக 36 நிமிடம் இருக்கும்பொழுது அவரை பூஜிக்க வேண்டும் .  சிலர் கடைசி 18 நிமிடம் தான் விசேஷம் என்பர் . 

வாஸ்து கடவுள் செய்யும் ஐந்து செயல்களின்போதும் அவரை பூஜித்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பார்ப்போம் . 

முதல் 18 நிமிடம் குளிக்கும்பொழுது - ராஜ பயம் உண்டாகும் .

இரண்டாவது 18 நிமிடம் - தேவையற்ற துன்பங்கள்  வரும் .

மூன்றாவது 18 நிமிடம் அதாவது உணவு உட்கொள்ளும்பொழுது - பிரச்சனைகள் வறுமை உண்டாகும் . 

நான்காவது 18 நிமிடம் அதாவது தாம்பூலம் தரிக்கும்பொழுது - குழந்தை செல்வங்கள் உண்டாகும் . 

ஐந்தாவது 18 நிமிடம் -ஆட்சி செய்தல் - பெரும்செல்வம் சேருதல் அனைத்திலும் வெற்றி உண்டாகும் .

வாஸ்து கடவுளை பூஜிக்க கடைசி நான்காவது ஐந்தாவது காலமே சிறந்தது . 

உங்களின் வீடு வாஸ்துப்படி சரியான முறையில் அமையாவிட்டாலும் - வாஸ்துப்படி வீட்டில் சிறுகுறைகள் இருந்தாலும் உங்கள் குடும்பத்தில் பிரச்சனை கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடு -   திருமணம் தாமதம் ஆகும் நிலை? திருமணம் ஆகி  குழந்தை பாக்கியம் இல்லாமை ? சொத்து பிரச்சனை நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையாமல் போவது ? குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலக்குறைவு திடீர் மரணங்கள் கூட ஏற்படலாம் . நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டம்  உங்கள் நிறுவனத்தால் அல்லது கடையால் நஷ்டம்  கடன் பிரச்சனையால் அவதிப்படும் நிலை  போன்றவை உண்டாகக்கூடும் 

இவைகளில் இருந்து விடுபட்டு குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்க உங்களின் வீட்டில் உள்ள வாஸ்து குறைகளை பரிகாரங்களுடன் நிவர்த்தி செய்து   உங்களின் குடும்பம் வளமாக இருக்க வழி காட்டுகிறோம் . 

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment