Showing posts with label இன்று 18 - 5 - 2018 - வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ?. Show all posts
Showing posts with label இன்று 18 - 5 - 2018 - வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ?. Show all posts

Friday, May 18, 2018

ஹீப்ரு பிரமிடு எண் 43 ல் இன்று 18 - 5 - 2018 - வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                                 ஓம் சிவசக்தி
 
இன்று 18 - 5 - 2018 வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியினுடைய - ஹீப்ரு பிரமிடு எண் 43.  இந்த ஹீப்ரு பிரமிடு எண் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் :

கிரகங்களில் ராகுவை குறிக்கக்கூடிய 4 ம் எண்ணும் குருவை குறிக்கக்கூடிய 3 ம் எண்ணும் இணைந்து கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் சிம்ம ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .

நன்மை தீமை ஆகிய இருவகை குணங்களை கொண்டது இந்த எண்  . பதவி - அறிவு - கம்பீரமான தோற்றம் - புத்திசாலித்தனம் ஆகியவற்றை தரும் . ஆனால் மறுபக்கம் பொருள் நாசம் - பதவியில் சிக்கல் குறுகிய மனம் போன்றவற்றை தரும் . 

இந்த எண்ணை பற்றி எகிப்திய பிரமிடுகளில் " மூன்று கோப்பைகள் மூன்று பெண்கள் " தொடர்பு பெற்று காணபடுகின்றன . இந்த 43 ம் எண்ணைப்பற்றி மந்திர நூல்களில் கற்பக தருமலர் வாசம் செய்யும் இடம் என்று  காணப்படுகிறது . மந்திர சக்தி வாய்ந்த இந்த 43 ம் எண்ணுக்கு இரு  பக்கங்கள் உண்டு . ஒன்று ராகு பலம் . மற்றொன்று குரு பலன் எனலாம் . மிகவும் ஆபத்தான இந்த 43 ம் எண் உயிர் ஆபத்துகளையும் - திடீர் சரிவையும் - சிறை வாழ்வையும் தரும்  தன்மையும்  இந்த எண்ணுக்கு உண்டு . 

புரட்சிகரமான வாழ்வையும் - விரோதிகள் பெருகிக்கொண்டே போவதையும் இந்த எண் குறிக்கிறது . தீவிர அபிப்ராயங்களை பிரசவித்தலும் - கற்பனை எழுத்துவளம் - பேசும் திறன் - ஆகியவைகளும் இந்த ஞானகாரனான கேதுவின் பலம் பெற்ற 43 ம் எண்ணிற்கு உண்டு . போராட்டம் பெரும் தடைகள் - புரட்சிகரமான மாற்றங்கள் - பொது வாழ்க்கையை பிரதானமாக எடுத்து கொள்ளுதல் - பொறாமை குணம் கொண்ட சிலர் மூலம் பிரச்சனைகளை சந்தித்தல் போன்றவையும் இந்த எண்ணிற்கு உண்டு . மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்துவதால் உண்டாகும் பிரச்சனைகளை சந்திக்கும் சூழ்நிலைகளையும் இந்த எண் உண்டாக்கும் . 


இவர்களின் இலட்சியங்கள் ஈடேறினாலும் சுயமாக சுகம் காணும் சூழ் நிலை உண்டாகாது . புத்தி கூர்மையும் - திறமையும் பெற்ற இவர்களுக்கு அனுபவிக்க வேண்டிய சுகங்களெல்லாம் தூர விலகி நிற்கும் . இவர்களது கருத்துகளுக்கு எதிர்ப்பு உண்டாகும் . நிம்மதியற்ற வாழ்வும் - உயிர் ஆபத்துகளும் இந்த எண்ணிற்கு நிச்சயம் உண்டு . " ஸர்வஜயம் என்பதால் இந்த 43 ம் காரர்கள் வெற்றி பெறுவார்கள் . ஆனாலும் பிரயோஜனம் இல்லை . 2 - 11 - 29 - 20 - இந்த தேதியில் பிறந்தவர்களுக்கும் இந்த எண் யோகம் தரும் . இருந்தாலும் பெயரின் கூட்டு எண் 43 க வருபவர்கள் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அவர்களின் பிறந்த தேதிக்கு ஏற்றாற்போல் அதிர்ஷ்ட கூட்டு எண்ணில் அமைத்து கொள்ளவேண்டும் 

                                                    அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை - வெளிர்நீலம் - ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் -  வைடூர்யம் - முத்து - சந்திர காந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் - ஞாயிறு - திங்கள்
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28 4 - 13 - 22 - 31
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி  மகம் மூலம் 
அதிர்ஷ்ட தெய்வ வழிபடு - ஸ்ரீ மஹாகணபதி
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B -  K -  R  - A -  I  - J - O - Z - M - T 

குழந்தையின் ஜாதகத்தில் 43 ம் எண்ணுக்குரிய கேதுவினால் ஏற்படும் தோஷம் தீர குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம்  1:

தாழை இலையில் எள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்க கேதுவினால் ஏற்படும் தோஷம் போகும் . 

பரிகாரம் 2 : 

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் கொள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் அந்த கொள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 ம் நாள் இரவு விநாயகர் ஆலயம் சென்று வழிபடவேண்டும் . 

பரிகார தலம் :

1.  இந்தியாவில் திருப்பதிக்கு அருகே உள்ள ஸ்ரீ காளஹஸ்தி 
2. இந்தியாவில் தமிழகத்தில் பூம்புகாருக்கு அருகில் உள்ள                        கீழப்பெரும்பள்ளம் .


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328