Thursday, June 18, 2020

கொடி சுற்றி குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாதா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் கெட்ட கோள்கள் லக்கினத்தை பார்ப்பதாலும் வேறு சில காரணங்களாலும் குழந்தை கொடி சுற்றி பிறக்கும் . 

மேஷம் - ரிஷபம் - சிம்மம் - ஆகியவற்றில் ஒன்று லக்னமாகி அதில் செவ்வாயும் சனியும் இருந்தாலும்  அல்லது இரண்டு கிரங்களும் பார்க்க பிறக்கும் குழந்தை இரண்டு கொடிகள் சுற்றி பிறக்கும் . 

செவ்வாய் மட்டும் பார்த்தால் செங்கொடி ஒன்று சுற்றி பிறக்கும் . 

சனி மட்டும் பார்த்தால் கருமை நிறமுள்ள கொடி சுற்றி பிறக்கும் .

இவையல்லாமல் மேஷம் - சிம்மம் - ரிஷபம் ஜென்ம லக்னமாகி குருவை தவிர சூரியன் சந்திரன் ராகு செவ்வாய் சனி ஆகியவை சேர்த்திருந்தால் பிறந்த குழந்தை கொடி சுற்றி பிறக்கும் என குமாரசுவாமியம் ஜோதிட நூல் கூறுகிறது 

தீய கோள்களின் வீடு லக்கினமாக இருக்க லக்கினத்தில் பாவிகள் இருந்தாலும் அல்லது பார்த்தாலும் ராகு கேதுக்கள் ஒன்று லக்கினத்தில் இருக்க பிறந்த குழந்தை உடலில் மாலை சுற்றி பிறக்கும் என்று ஜாதக சிந்தாமணி ஆசிரியர் தில்லை நாயகனார் கூறுகிறார் .  

தோஷம் உறவு வகையில் யாருக்கு ஏற்படும் :

இக்கொடியானது குழந்தைகளின் உடலில் மூன்று முறை சுற்றி இருந்தால் குழந்தைக்கும் இரண்டு முறை சுற்றி இருந்தால் தாய்க்கும் ஒரு முறை சுற்றி இருந்தால் மாமனுக்கும் பக்கங்களில் சுற்றி இருந்தால் தந்தைக்கும் வலக்கையில் சுற்றி இருந்தால் சகோதரர்களுக்கும் இடக்கையில் சுற்றி இருந்தால் குழந்தைக்கும் தோஷம் உண்டாகும் என சாந்தி ரத்னாகரம் நூல் கூறுகிறது . 

இதற்கான பரிகாரம் :

இப்படி கொடி சுற்றி பிறக்கும் குழந்தைகளால் ஏற்படும் தோஷம் விலக குழந்தையின் முகத்தை முதலில் பார்க்கும்பொழுது நேரடியாக பார்க்காமல் எண்ணெயில் தெரியும் உருவத்தின் வழியாக பார்க்கவேண்டும் .  இந்த முறை வழக்கத்தில் உள்ளது . 

மேலும் எண்ணெயில் முகம் பார்ப்பதோடு மட்டுமல்லால் குழந்தையின் உடலில் எப்படி கொடி சுற்றி இருந்ததோ அப்படியே வெள்ளியில் ஒரு கம்பி செய்து அக்கம்பியையும் எண்ணெய் பாத்திரத்தையும் அந்தணர்க்கு தானம் செய்து கொடுத்து விடுவார் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:


91 + 8122733328

0 comments:

Post a Comment