Showing posts with label ஜோதிடம் என்பது மெய்யா ?. Show all posts
Showing posts with label ஜோதிடம் என்பது மெய்யா ?. Show all posts

Monday, July 30, 2018

ஜோதிடம் என்பது மெய்யா ? ஜோதிடம் என்பது விஞ்ஞானத்துடன் தொடர்புடையதா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - பதில்கள் ?

0 comments
                                                     
இன்றைய வானியல் விஞ்ஞானத்தின் தாய் பண்டைய ஜோதிட கலையே என்று உலகமே ஒப்பு கொள்ளும் வகையில் வரலாற்று பக்கங்களில் ஏராளமான தகவல்கள் கொட்டி கிடக்கின்றன . சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே வானிலுள்ள கோள்களின் அடிப்படையில் ஜோதிடம் கணிப்பதில் நம் முன்னோர்கள் நிபுணர்களாக இருந்திருக்கின்றனர் .  

கலிலியோவும் நியூட்டனுக்கு தோன்றுவதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னரே பாஸ்கரா ஆரியப்பட்டா போன்ற வான சாஸ்திர நிபுணர்கள் இந்தியாவில் தோன்றி வானியல் குறித்த பல அற்புதமான உண்மைகளை கண்டுபிடித்தனர் .

பைபிளிலும் பண்டைய எகிப்திய சீன நூல்களிலிலும் நமது ராமாயணம் மஹாபாரதம் போன்ற இதிகாச காவியங்களிலும் கோள்களின் அடிப்படையில் வருங்கால நிகழ்வுகளை கணித்ததாக பல கதைகளும் குறிப்புகளும் உள்ளன . 

சரித்திரத்தின் பக்கங்களை புரட்டினாலும் ஜோதிட கலை குறித்த பல வியப்பான தகவல்கள்  கிடைக்கின்றன . 

மாவீரன் அலக்சாண்டாரின் அரண்மனையில் இந்திய ஜோதிட நிபுணர்கள் இருந்திருக்கின்றனர் . அவர்கள் அலெக்சாண்டரின் ஜாதகத்தை கணித்து பாபிலோன் நகரில் நீங்கள் விஷம் வைத்து கொல்லப்படுவீர்கள் என்று எச்சரித்திருக்கின்றனர் . 

பல ஆண்டுகள் பாபிலோன் நகருக்கே செல்லாமல் அலேக்சாண்டர் தவிர்த்து வந்தார் . இறுதியாக வேறு வழியின்றி பாபிலோன் சென்றபோது ஜோதிடர் கணித்தபடி எதிரிகளால் விஷம் வைத்து கொல்லப்பட்டார் . 

இயேசு கிறிஸ்து பிறந்தபோது ஏரோது மன்னனின் அவையில் இருந்தது ஜோதிட நிபுணர்கள் யூத குலத்தில்  ஒரு குழந்தை பிறந்திருப்பதாகவும் அந்த குழந்தை யூத மக்களது குலத்தின் தலைவனாக மாறுவான்  ஏரோது மன்னனின் பரம்பரை ஆட்சி அழிந்து விடும் என எச்சரித்தனர் . 

இதனால் கலக்கமடைந்த ஏரோது மன்னன் தனது நாட்டிலுள்ள ஒரு வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகள்யும் கொன்று விட உத்தரவிட்டான் . ஆனால் இயேசு தப்பித்து விட்டார் . ஜோதிடம் பலித்தது . 

கம்சன் கதையும் கிட்டத்தட்ட இதேதான் . தனது தங்கைக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தனது உயிருக்கு ஆபத்து என்று ஜோதிடம் சொல்லியதால் தங்கையையும் அவளது கணவனையும் சிறையில் அடைத்து குழந்தைகளை கொன்றான் .  ஆனாலும் கிருஷ்ணன் தப்பித்து கடைசியில் கம்சனை வதம் செய்ய ஜோதிடம் உண்மையானது . 

ஜுலியஸ் சீசரின் அரண்மனையில் ஸ்பூரினா என்ற புகழ் பெற்ற ஜோதிட நிபுணர் இருந்தார் . ஒவ்வொரு முறை போருக்கு செல்லும்போதும் அவரது அறிவுரைபடியே வியூகங்களை அமைத்து பல வெற்றிகளை ஜுலியஸ்  பெற்றார் . தனது நண்பர்களாலேயே ஜுலியஸ் சீசர் கொல்லப்படுவார் என சீசரை ஸ்பூரினா எச்சரித்திருந்தார் அப்படியே நடந்தது . 

பாஸ்கரா க்கான பட முடிவு

நெப்போலியன் காலத்தில்  லினோர்மாண்ட் என்ற பெண் ஜோதிட நிபுணர் மிகவும் புகழ் பெற்று விளங்கினார் . மாஸ்கோ மீது படை எடுத்து சென்றால் தோல்வி நிச்சயம் என இவர் நெப்போலியனை எச்சரித்து இருந்தார் . ஆனால் நெப்போலியன் அதை பொருட்படுத்தாமல் ரஷ்யா மீது படை படை நடத்தி சென்று தோல்வியை தழுவ வென்றி இருந்தது . 

இவ்வாறு பண்டை காலம் தொட்டே வரலாற்றின் பக்கங்களில் ஜோதிட கலைக்கு பல ஆதாரங்கள் உள்ளன .
சர் ஐசக் நியூட்டன் க்கான பட முடிவு
இயற்பியலின் தந்தை என அழைக்கப்படும் சர் ஐசக் நியூட்டனின் அறையில் நூற்று கணக்கான விஞ்ஞான புத்தகங்களின் நடுவே ஜோதிட கலை புத்தகங்ளையும் அவர் வைத்து இருந்தாராம் .

நியூட்டனின் மாணவரான ஹாலி என்ற விஞ்ஞானிக்கு இது பிடிக்கவில்லை  விஞ்ஞான புத்தகங்கள் இருக்கும் அறையில் அவற்றுக்கு நிகராக மூட நம்பிக்கை வளர்க்கும் ஜோதிட புத்தகங்களா ? என தனது எதிர்ப்பை நியுட்டனிடம் தெரிவித்தார் . 

அதற்க்கு நியூட்டன் கூறிய பதில் என்ன தெரியுமா? ஜோதிட கலை குறித்து நான் முழுமையாக கற்றிருக்கிறேன் . எனவேதான் மதிப்புக்கு உரிய இந்த புத்தகங்களை நான் வைத்திருக்கிறேன் . உனக்கு ஜோதிடம் பற்றி தெரியாததால் நீ அதை எதிர்க்கிறாய் . இவ்வாறு பதில் சொன்னார் . 

ஜோதிடமும் விஞ்ஞானமும் இன்று எதிரெதிர் துருவங்களாக நின்று மல்லு கட்டி கொண்டு இருக்கின்றன . ஒரு காலத்தில் உயர்ந்த கலையாக விஞ்ஞானமாக போற்றப்பட்ட ஜோதிடம் இன்றும் ஒரு சிலரால் இது ஒரு ஏமாற்று வேலை என்று ஒதுக்கப்படுகிறது .அந்த காலத்தில் ஜோதிடமும் வான சாஸ்த்திரமும் ஒட்டி பிறந்த குழந்தைகளாகவே இருந்திருக்கின்றன . மத குருமார்களே வானியல் வல்லுனர்களாகவும் ஜோதிட விற்பன்னர்களாகவும் அரசுக்கு ஆலோசகர்களாக கோலோச்சி வந்திருக்கிறார்கள் . அவர்களின் கணிப்புகளும் அப்படியே நடந்திருக்கின்றன . 






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328