Wednesday, September 28, 2022

செவ்வாய் தோஷம் எதனால் ஏற்படுகிறது ? செவ்வாய் தோஷம் என்பது எதுவரை ? செவ்வாய் தோஷத்தை போக்கும் பரிகாரங்கள் என்ன ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                  

பிறக்கும்போது ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு நிலையில் செவ்வாய் கிரகம் அமைந்திருக்கும். அப்படி அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் ஆகும்.

பூர்வ ஜன்ம வினைகளும், பாவங்களும் தோஷங்களாக மாறுகின்றன என்கின்றன ஞானநூல்கள். 

அந்த வகையில் பூர்வ ஜன்மத்தில் பெற்றோரை சரியாகக் கவனிக்காதவர், முதிய வயதில் அவர்களை முறையாகப் பராமரிக்காதவர்களுக்கு , மறுஜன்மத்தில் செவ்வாய் தோஷத்துக்கு ஆளாவர் என்கின்றன  ஜோதிட நூல்கள். 

அதேபோல், சகோதர- சகோதரிக்குச் சேரவேண்டிய சொத்துக்களை ஒருவரே அபகரிக்கும் போதும், ஒரு நிலத்தை அநியாய விலைக்கு ஏமாற்றி விற்கும்போதும், அந்த நபரை பூமிகாரகனான செவ்வாயின் கோபம் செவ்வாய்  தோஷமாக தாக்குகிறது.

பிறக்கும்போது லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு நிலையில் செவ்வாய் கிரகம் அமைந்திருக்கும். அப்படி அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் ஆகும். இதை சந்திரன் இருக்கும் இடத்திலிருந்தும் சுக்கிரன் இருக்கும் இடத்திலிருந்தும் பார்க்கவேண்டும் . இந்த மூன்று நிலைகளிலும்  செவ்வாய் இருந்தால்தோஷம்  கடுமையாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் .  

2-ல் செவ்வாய் இருப்பது 

தனம், குடும்பம், வாக்கு ஸ்தானமாக திகழ்வது இரண்டாவது இடம். இதில் செவ்வாய் இருப்பது வாழ்க்கை துணைவருக்கு ஆபத்தை தரும் பணக்கஷ்டம் குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படும் . 

4-ல் செவ்வாய் இருப்பது 

கணவனின்  தொழில் தாயின் உறவு நிலையில் பாதிப்பு . தாயின் உடல் நலம் இவைகளில்  . பாதிப்பை ஏற்படுத்தும் . 

7-ல் செவ்வாய் இருப்பது 

வாழ்க்கைத் துணையுடன் ஏட்டிக்குப் போட்டியாகவே பேசிக் கொண்டிருப்பார். இவர்களுக்கு, 7-ல் செவ்வாய் இருக்கும் ஜாதகக்காரர்களையே மணம் செய்து வைப்பது நல்லது. இவர்கள் வியாபாரத்தில் பார்ட்னர்ஷிப்பைத் தவிர்ப்பது நல்லது.

8-ல் செவ்வாய் இருப்பது 

ஆயுளில் குறையை ஏற்படுத்தும் . 

12-ல் செவ்வாய் இருப்பது 

நிம்மதியான தூக்கம் இருக்காது. தாம்பத்ய சுகத் தை பாதிக்கும் . 

செவ்வாய் தோஷ நிலைகளில் விதிவிலக்கு உண்டா?

ஜாதகத்தில் மேற்சொன்ன இடங்களில் செவ்வாய் இருக்கிறார் என்று மேலோட்டமாகப் பார்த்துவிட்டு முடிவுக்கு வரக்கூடாது. மற்ற கிரகங்களில் நிலைகளையும் கவனிக்கவேண்டும்.

செவ்வாய் தோஷம் சில தருணங்களில் வலு குன்றியதாகவும் திகழும். செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலோ, குருவோடு சேர்ந்து நீச கதியில் நின்றாலோ, வர்க்கோத்தமம் பெற்றிருந்தாலோ (உங்கள் ஜாதக ராசி கட்டத்திலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருப்பது) செவ்வாய் தோஷத்தின் பாதிப்பு குறையும்.

செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷத்தைச் சேர்ப்பது தான் நல்லது என்பதே எனது கருத்து. ஏனெனில், உணர்ச்சிக்குரியதே செவ்வாய் கிரகம். உடல் மற்றும் மன உணர்வுகளைச் சமமாக இருவரும் வெளிப்படுத்தும்போது, கணவன்-மனைவிக்குள் வீண் பிரச்சனைகள்  எழாது.

அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் செவ்வாய் ஆதிக்கமுள்ள நிலம் உடன் பிறப்புகள் சம்பந்தப்பட்ட  விஷயங்களில் நேர்மறையான அணுகுமுறையை வைத்துக்கொண்டால், செவ்வாய் தோஷத்தின் வீரியம் குறையும்.

முடிந்தவரையிலும் ரத்த தானம் செய்யுங்கள். இப்படி ரத்த தானம் செய்வது செவ்வாய் தோஷ கெட்ட பலன்களை 99 குறைத்து விடும் விபத்தில் சிக்கியவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள்.

பூர்வீகச் சொத்துப் பிரிவினையில் சகோதர- சகோதரிகள் பெற்றோரின் மனத்தாங்கலுக்கு ஆளாகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். செவ்வாயை வீட்டு மனைக்காரன் என்பார்கள் . முதன் முதலாக வாங்கும் சொத்தை நிலமாக வாங்காமல், கட்டப்பட்ட கட்டடமாக வாங்குவது சிறப்பு.

ஊர்க் காவல் முதல் போலீஸ் ராணுவம் வரையிலும் காவல் பணியை ஆட்டுவிப்பது செவ்வாய்தான். எனவே, ராணுவம், போலீஸ் என காவல் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பதும், உதவி செய்வதும் செவ்வாய்  தோஷ வீரியத்தை குறைக்கும் பரிகாரங்களாகும் . 

ஊர் எல்லையில் கோயில்கொண்டிருக்கும் காவல் தெய்வங்களுக்குச் செம்பருத்தி மற்றும் விருட்சிப்பூ சாற்றி வழிபடுவது செவ்வாய் தோஷ வீரியத்தை குறைக்கும் மேலான பரிகாரமாகும் . ..

வீட்டில் வில்வம், வன்னி மரக்கன்றுகள் நட்டுப் பராமரியுங்கள். அதற்க்கு தினமும் தண்ணீர் ஊற்றுங்கள் 

எல்லாவற்றுக்கும் மேலாக அனுதினமும் முருகப்பெருமானை வழிபட, அவர் அருளால் செவ்வாய் தோஷ பாதிப்புகள் குறைந்து, வாழ்க்கை வளமுறும் . 

செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் செம்பு மோதிரம் அணிந்துகொள்வது செவ்வாய் தோஷம் வீரியம் குறைந்து நல்ல பலன்கள் உண்டாகும் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment