Tuesday, September 20, 2022

ஏழரை சனியின் காலத்தில் மங்கு சனி - பொங்கு சனி - மரண சனி என்றால் என்ன ? ஆன்மீக ஜோதிடர் ஆர். இராவணன் BSC

 

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக, அதிக காலம் எடுத்துக் கொண்டு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகரக்கூடியவர் சனி பகவான்.

ஏழரை சனியின் பலனின் வீரியம் மங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி என மூன்றாக பார்க்கலாம்.

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக, அதிக காலம் எடுத்துக் கொண்டு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகரக்கூடியவர் சனி பகவான்.

இவர் ஒவ்வொரு ராசியிலும் 2 1/2 ஆண்டுகள் சஞ்சரிப்பார். ஒரு ராசியில் சனி சஞ்சரித்தல், மீண்டும் அதே ராசிக்கு திரும்ப 30 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் வருவார்.

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் போது அந்த ராசிக்கு முன் மற்றும் பின் உள்ள ராசிகளுக்கு ஏழரை சனி நடக்கும்.


மங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி என்றால் என்ன?

பொதுவாக ஏழரை சனி நடக்கக்கூடிய காலம் கடுமையான ஆண்டாக பார்க்கப்படுகிறது. ஆனால் சனி பகவான் அவர் எத்தனையாவது முறை வருகின்றது என்பது பொறுத்தும் சனி தரக்கூடிய பலன் கடினமாக இருக்குமா அல்லது சாதாரணமாக இருக்குமா என்று தெரியும்.

மங்கு சனி: 

ஒருவர் பிறந்து 30 வயதுக்குள் முதன் முறையாக வரக்கூடிய ஏழரை சனி காலம் மங்கு சனி என்று குறிப்பிடலாம்.

முதல் முறை வரும்போது, சனியின் கடுமையான தாக்கம் பெரியளவில் தாக்கம் தராது. சொல்லப்போனால் ஏழரை சனி நடப்பது போன்றே இருக்காது. இந்த காலத்தில் பொருள், நிதி வரவு சிறப்பாக இருக்கும். பெரிய தாக்கம் ஏற்படாது.


பொங்கு சனி : 

30 வயதிலிருந்து 60 வயதிற்குள், இரண்டாவது முறை வரக்கூடிய ஏழரை சனி காலம் கூடுதல் கடுமையானதாக இருக்கும். இந்த காலத்தில் ஒருவரின் வாழ்க்கையே திசை திரும்பக்கூடியதாக இருக்கும்.

இரண்டாவது ஏழரை சனி காலமான பொங்கு சனி காலத்தில் ஒருவர் கடுமையான அனுபவங்களை அனுபவிக்க வேண்டியது இருக்கும். கர்மாவிற்கு ஏற்றபடி அவரின் காலம் மிக கடுமையானதாகவோ அல்லது பெரிய பாதிப்பில்லாமல் நாட்கள் நகரும்.

அதே போல சனி ஜாதக கட்டத்தில் இருக்கும் வலுவின் அடிப்படையில் பலன் இருக்கும். துன்ப அனுபவங்கள் தருவார்.

மரண சனி : 

ஒருவரின் வாழ்நாளில் மூன்றாவது முறையாக வரக்கூடிய ஏழரை சனி காலம் மரண சனி என குறிப்பிடலாம்.

அப்போது அந்த ஜாதகருக்கு கடினமான உடல் நலப் பிரச்னைகள், உடல் வலுவின்மை ஏற்படலாம். அவருக்கு மரண துன்பம், துயரத்தை அனுபவிக்க வைப்பார்.

அந்த நேரத்தில் அந்த ஜாதகருக்கு நல்ல தசை, புத்தி நடந்தால் பெரிய பிரச்னையை சந்திக்க மாட்டார். இல்லையேல் அவருக்கு மரணம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.

3வது முறையாக வரும் சனியால் அந்த நபர் பூலோகத்தைவிட்டு இறைவனை சரணடையக்கூடிய காலம் எனலாம்.

அதனால் வயதான காலத்தில் நாம் இறைவனை சரணடைந்து நாம் முக்தி பெற வழியைத் தேட வேண்டும்.


அர்த்தாஷ்டம சனி என்றால் என்ன ?
 

சனி பகவான் ஒரு ராசிக்கு 4ம் இடத்தில் சஞ்சரிக்கக்கூடிய நிலை அந்த ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனி ஆகும்.

பொருள் மற்றும் நிதி செலவுகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். அதாவது அர்த்தாஷ்டம சனி நடக்கக்கூடிய ராசிக்கு அல்லது அவரது குடும்பத்தினருக்கு திடீர் உடல் நல பாதிப்புகள் ஏற்படுத்தி மருத்துவ செலவுக்கான திடீர் செலவுகள் ஏற்படுத்தும். அதனால் சேமிப்பு பணம் விரயமாகக் கூடிய நிலை ஏற்படும்.

புதிய தொழில் முயற்சிகள், வியாபாரம் உள்ளிட்டவை பெரிய வெற்றி தராமல், தான் முன்னெடுத்த முயற்சிகளைக் கைவிடக் கூடிய நிலைக்கு நம்மை தள்ளும். மீண்டும் அந்த பழைய நிலையிலேயே நிற்க வைக்கும்.

கவனச் சிதறல் ஏற்படுத்தக்கூடும் நிலை இருக்கும். அதாவது வாகனங்களில் செல்லும் போது விபத்து ஏற்படுதல், அதனால் உடல் சுகவீனம் அடைதல் போன்றவை நடக்க வாய்ப்புள்ளது.

உறவினர்கள், நண்பர்கள் வழியில் சில வருத்தமான நிகழ்வுகள் ஏற்படும். கல்வியில் மந்த நிலை ஏற்படும்.

தாயின் ஆரோக்கியத்தில் சில பிரச்னை ஏற்படலாம். இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்தில் சென்று குடியேற வேண்டி வரும். பழைய வீட்டை புதுப்பித்து அதில் தங்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

கிரகங்களின் பார்வை, லக்ன சுபர் மற்றும் அசுபர் என்ற நிலைக்கு ஏற்றார் போல தன் பலன்களைத் தருவதாக இருக்கும்.


அர்த்தாஷ்டம சனி பரிகாரம் : 


சனிக்கிழமைகளில் சிவாலயங்களுக்கு சென்று வழிபடுவதும். அனுமனை வழிபடுவதும், உஙக்ள் செயலுக்கு பல மடங்கு பலனைத் தரும்.

ஏழை பிள்ளைகளின் கல்விக்கு உதவி செய்வதும், ஏழை பெண்களின் திருமணத்திற்கு பொருளாதார உதவி செய்வதும் நல்ல பலன்களை தரும் 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328




0 comments:

Post a Comment