Thursday, September 15, 2022

செப்டம்பர் 15 - 2022- இன்று வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர் இராவணன் BSC


                                        இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 15 - 9 - 2022 - சுக்ரனின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 21 - குருவின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 31- ராகுவின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - வியாழன் 

இன்று 15 - 9 - 2022 - வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 31. 

3 1      =  ஹீப்ரு பிரமிடு எண் 
2 1 9
9 2 8 1
2 7 4 4 6
6 5 2 2 2 4
1 5 9 2 0 2 2   =  குழந்தை பிறந்த தேதி 

நவ கிரகங்களில் குருவின் ஆதிக்க எண்ணும்  சூரியனின் ஆதிக்க எண்ணும் இணைந்து ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் கடகராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

மனித சக்திக்கு அப்பாற்பட்ட எண்ணாக கருதப்படுகிறது . 

மந்திர ராஜ வசியம் என சாஸ்திர நூல்களில் இந்த எண் பற்றி காணப்பட்டுள்ளது . 

எகிப்திய பிரமிடு சித்திரங்களில் ஐந்து மனிதர்களோடு ஐந்து தடிகள் போன்ற சித்திரங்கள் இந்த 31 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

ஐம்பொறிகளை அடக்க முடியாமல் அவைகளின் ஆதிக்க சக்தியால் ஆட்டுவிக்கப்படும் மனிதர்களை இவ்வெண் காட்டுகிறது . 

சிவராஜயோகம் பெற்ற இவ்வெண் காரர்கள் வீர விளையாட்டு துறை சினிமா நாடகம் இசை எழுத்து போன்ற துறைகளில் பிரசித்து பெறுவர் . 



பொன் பொருள் வீடு மனைவி வாகனம் பதவி அனைத்தும் இருந்தும் மனம் தனிமையையும் தத்துவ ஏகாந்த நிலையையும் நாடும் , 

சிறந்த நிர்வாகியாய் இருந்தபோதும் தனது பெயரில் பணத்தையோ சொத்துக்களையோ வைத்திருக்க கூடாது . 

காரிய தடைகளுக்கு பிறகு காரிய சித்தி உண்டாகும் . உயர் பதவி மனிதர்களின் நட்பு உண்டாகும் . 

சுதந்திரமே பிரதானமாக இருக்கும் . போராடி வெற்றி பெற்றாலும் பலனை அனுபவிக்க முடியாமல் போகும் . 

வெற்றி மயக்கம் இவர்களுக்கு மகிழ்ச்சியை தருவதில்லை . தனது 31 வது  வயதில் எல்லாவற்றையும் இழக்க அல்லது துறக்க வேண்டிய நிலை ஏற்படும் . 

நாளும் தெரிந்தவராக இருந்தாலும் எதிர்பாராத நிகழ்ச்சிகளாலும் திடீர் முடிவுகளாலும் பாதிக்கப்படுவார்கள் . ஆனால் தீர்க்க தரிசனத்தால் தனது முடிவை தானே உணர்ந்து கொள்வார்கள் . 

கடக ராசியில் ஆதிக்கம் கொண்ட எண் என்பதால் ஆன்மீக சக்தியால் காப்பாற்றபடுவார்கள் . 



அறுபத்து  நான்கு தந்திரங்களும் ஸ்ரீவித்தையும் என சக்தி தேவியின் புகழ் பாடும் சௌந்தர்ய லஹரி நூல் கூறுவதால் ஸர்வ வசீகரமான இவ்வெண் 1 - 10 - 19 - 28  ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கும் 

பிறந்த தேதியின் கூட்டு எண் 1 க வரும் குழந்தைகளுக்கும்    இந்த 31 எண் நற்பலன்கள்  தரும் . 

பெயரில் இந்த 31 ம் எண் வந்தாலும் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிட் எண் 19  - 37 -  46 - க வருமானால் வளமான வாழ்வுக்கு உத்திரவாதம் உண்டு . 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையில் அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கு சூட்டுவதன் மூலம் வளமான எதிர்காலம் அமையும் . 



                                           அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம் 
கல் - மஞ்சள் புஷ்பராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
ஆரம்ப எழுத்து - M - T-  A - I - J
தேதி -  4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி
நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம் 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண்ணுக்குரிய  31 ம் எண்ணுக்கு உரிய ராகு கிரகத்தால் ஏற்ப்படும் தோஷம் விலக குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட குழந்தையின் ஜாதகத்தில் உள்ள  ராகுவால் ஏற்படும் தோஷம் விலகும் . 

செப்டம்பர் 15 ல் இன்று பிறந்தவர்கள் : 


ரம்யா கிருஷ்ணன் - இந்திய தமிழ் திரைப்பட நடிகை - பிறப்பு 15 - 9 - 1970 


சுப்ரமணிய சுவாமி - இந்திய அரசியல்வாதி - பிறப்பு 15 - 9 - 1939
 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment