Saturday, July 16, 2022

நாஸ்டர்டாம் தனது தீர்க்க தரிசனத்தால் உலக அழிவை பற்றி சொல்லி இருக்கிறாரா ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSCC

                                  

பைபிள் , குரான் மற்றும் இந்து புராணங்களில் முக்காலத்தையும் உணர்ந்தோர் பற்றியும் , எதிர்காலத்தில் நடக்கப் போவதைப் பற்றியும் தீர்க்க தரிசனமாக அறிவித்ததாக படித்திருக்கிறோம். இதில் பலருக்கும் அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம்..

உலகில் ஒரு சம்பவம் நடக்கப் போவதை முன் கூட்டியே உணர்ந்து , அதை தீர்க்கமாகக் கூறுவதை சாதாரண பாஷையில் ஜோதிடம் ,ஆரூடம் என்கிறோம்.இத்தகைய சிலரது இந்த சக்தியை இ எஸ் பி ( ESP - Extra Sensory Perception ) பவர் என்கிறோம்.இது குறித்த சில திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. இவற்றை நம்புவதா? வேண்டாமா? என்பதை அவரவர் விருப்பத்திற்கு விட்டு விடலாம். ஒருவரைத் தவிர.

அவர்தான் ஞானி - தீர்க்கதரிசி நாஸ்டர்டாமஸ்.பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு அறிஞர்.

இவரது குறிப்புகளில் உலகில் நடைபெறப்போகும் மாபெரும் நிகழ்வுகள் மட்டுமல்லாமல், முக்கியமான மனிதர்கள் , அவர்களது வாழ்க்கையில் நடைபெறக்கூடிய முக்கியமான நிகழ்ச்சிகள், ஏன் அவர்களில் சிலரது மரணம் சம்பவிக்கும் விதத்தையும் கணித்து கூறியுள்ளார். இதில் இந்தியாவைப் பற்றிய கணிப்பு களைப் பற்றி மட்டும் காணலாம்.

பிரதமர் இந்திரா காந்தி:

பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்கள் தங்களுக்கான ' காலிஸ்தான் என்ற தனிநாடு கோரிக்கையை கேட்டு, போராட ஆரம்பித்தனர். சீக்கிய மதத்தலைவரான ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே தலைமையில் இது நாளடைவில் நாட்டின் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் தீவிரவாத இயக்கமாக வளர்ந்து நின்றது. இதனை ஒடுக்க ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற ராணுவ நடவடிக்கை எடுத்ததன் மூலம் பொற்கோவிலில் நடந்த விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் இந்தியாவைக் கொல்லும் அளவுக்கு அவர்கள் மனதில் வன்மத்தை வளர்த்தது.

முடிவில் 1984 அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனை நாஸ்டர்டாமஸ் அன்றே கண்டித்துள்ளார்.

இப்படி ஒரு வீரமங்கை பதவிக்கு வந்து, குடியரசு நாட்டை ஆளுவாள்.அவள் இரண்டாம் முறை பதவிக்கு வரும்போது , பகைவர்களின் சதிக்கு ஆளாகி , தனது 67 வது வயதில் உயிர்துறப்பாள்.இது 400 ஆண்டுகளுக்கு முன்பே கணித்துள்ளது அதிசயமே..


She chased out shall to the realm

Her enemy found to be conspirators,

More than ever her time shall triumph

Three and seventy to death for sure.


பெருமகள் அவர்க்கு ராஜ்ஜியம் திரும்பும்.- தம்

எதிரிகள் சதியாளராய் மாறுவார் - திருமதியின்

வாகை நெடுநாள் உரைக்கப்படும்,

எழுபதுக்கு மூன்றில் துர்மரணம் உறுதியாகும்.

இப்பாடலில் 70 க்கு 3 அதாவது 70 - 3 = 67 வயதில் அவரது உயிர் பிரியும் என்பதாகும்.

பிரதமர் ராஜீவ் காந்தி :

இவரின் மரணத்தை இந்திராவுக்கு கூறியது போல் மறைமுகமாகக் கூறியதைக் போல் அல்லாமல் நேரடியாகவே உரைத்துள்ளார்.

ஆகாய விமானம் கண்டுபிடிக்காத காலத்திலேயே பைலட் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்.அதாவது பிற்காலத்தில் ஆகாய விமானம் கண்டுபிடிக்கப்படும்.அதை இயக்குபவரும் கப்பல் ஓட்டுனர்களை பைலட் என்று அழைப்பது போல, விமானிகளும் பைலட் என்று அழைக்கப்படுவார்கள் என்பதையும் அறிந்துள்ளார்.

இந்திராகாந்தி அம்மையார் இறந்தபின் பிரதமராக பதவியேற்கும் ராஜிவ் காந்தி, அடுத்த ஏழாவது வருடத்திலேயே அவரது மரணம் சம்பவிக்கும் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.அவர் ஒரு விமானியாக இருந்து, பிரதமரானவர் என்பது தெரிந்ததே. இதோ கூறுகிறார்.


The great pilot shall be sent for by royal mandate

To leave the fleet, and be preferred to a higher place,

Seven years after he shall be countermanded

A barbarian army shall put Venice to fear.


அதாவது ,

ராஜ ஆணையின் மீதொரு விமானி - தன்

படைவிட்டு ஓர் தலைவனாய் உணர்வான்

ஏழாம் ஆண்டில் கட்டளை ரத்தாகும் - காட்டு

மிராண்டி யின் அச்செயல் , வெனிசில் தொற்றுமோ அச்சம்.

இக்கொடூரச்செயல் வெனிஸ் நகரத்தைச் சேர்ந்தவருக்கு பெரும் கோபத்தை உண்டாக்கி , அக் காட்டு மிராண்டிகளுக்கு படத்தினை உண்டாக்கும் எனக் குறிப்பிடுகிறார். ராஜிவ் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலையில் படிக்கும் போது, இத்தாலியின் வெனிடோ மாநிலத்தில் பிறந்த சோனியாவை காதலித்து மணம் புரிந்தார்.வெனிடோ மாநிலத்தின் தலை நகர் ' வெனிஸ் ' .. அதிசயம் தானே?


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்:

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியதும் , இந்தியாவை விட்டு வெளியேறி, ஜெர்மனியில் இருந்து கொண்டு, ரகசியப்படை திரட்டியதையும் , பிரிட்டனுக்கு எதிராக படைதிரட்டிய குற்றத்துக்காக, பிரிட்டிஷார் சல்லடை போட்டுத் தேடுகையில் , நீர்மூழ்கிக் கப்பல் மூலம் வெளிநாடு தப்பிச் சென்றதையும் முன்பே குறிப்பிட்டுள்ளார். இதோ,


The leader who shall lead an infinite number of people,

Far from their country to one of strange manners and language.

Five thousand in Candia and this Thessaly finished

The leader escaping, shall be safe in a ban on the sea.


எண்ணிலடங்கா மக்களை இயக்குவார் தலைவன் - தன்

இடம் விட்டு மொழிநடை மாற்றி தொலை தூரத்தில் !

ஐந்தாயிரம் வர் சுற்றிய ஊர்களில் முடிவர் !

தண்ணீரினுள் புகுந்து தப்பிவிடுவான் தலைவன்.


ராணி லட்சுமி பாய்.

When the queen shall see herself vanquished,

She shall do a deed of masculine courage,

Upon a horse, she shall pass over the river alone,

Followed by iron, she shall do wrong to her faith.


அரசின் தோல்வி, கண்ணெதிரே காண்பாய்,

பேராண்மை கொண்டு பல தீரச் செயல்களும் புரிவாள் ,!

ஒற்றைக் குதிரையில் தனிமையில் காற்றைத் கடப்பாள் ,

இரும்பு தொடர்ந்திட ஏற்றவைக்கு மாறிழைப்பாள்.


முதல் விடுதலைப் போராட்டம் என்ற சிப்பாய் கலகம் நிகழ்வதற்கு முன்பே பெரும் தீரத்துடன் வெள்ளையர்களை எதிர்த்து நின்ற ராணி லட்சுமி பாய் , எதிரிகளின் துப்பாக்கிகளும் , பீரங்கிகளும் வீழ்த்த முடியாத பெண்ணரசியை , துணை நின்றவர் களின் ஒத்துழையாமையும் , துரோகமும் வீழ்த்தியதால் உயிரிழந்தாள்

மேலும் இளவரசி டயானா வின் மரணம் , இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் பங்கு , பிரெஞ்சு புரட்சி , நெப்போலியன் , பிரான்ஸ் மன்னர் 2ஆம் ஹென்றி மரணம் , 1666ல் லண்டனில் நிகழ்ந்த மிகப்பெரிய தீ விபத்து , போப் முதலாம் ஜான் பாலின் மரணம் , அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி மரணம்..என்று இவர் குறிப்பிட்ட செய்திகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது..

இவரது இரண்டு பாட்டனார் களும் யூத மதத்தின் ஆழ்ந்த ரகசியங்கள் , கிறிஸ்தவ தேவாலயங்களால் தடைசெய்யப்பட்ட மந்திர தந்திரங்கள் சார்ந்த தெய்வீகக் கலைகளை இவருக்கு கற்றுத் தந்தனர். ரசவாதம் , கபாலா போன்ற முறைகளும் இவருக்கு அமானுஷ்ய சக்தியைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பொதுவாக அவர் எழுதி வைத்திருக்கும் பாடல்களிலிருந்து சரியான கணிப்பை யாராலும் சொல்ல இயலவில்லை என்பதே..உண்மை. நடந்து முடிந்த பிறகு .ஓ இதைத் தான் சொல்லியிருக்கிறார் என்பதே இதுவரை நடந்துள்ள உண்மை. முத்தாய்ப்பாக உலகம் எப்போது அழியும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

சனி ரிஷபத்திலும் , குரு கும்பத்திலும் , செவ்வாய் தனுசிலும் சேரும் , பிப்ரவரி ஆறில் மரணம்.

தார்டைக்னின் ப்ருஜசில் , மாபெரும் பிளவில் தீமைகள் அனைத்தும் பெருமுடிவு பெரும்.!

அதாவது இக்கோள்கள் இணையும்போது உலகம் அழியும். ஆண்டு 2029 அது நடக்கவில்லை எனில் 3797..என்கிறார்கள்.இதன்பிறகு புதுயுகம் பிறக்கும் என்கின்றனர்..

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment