Sunday, July 24, 2022

வீடு கட்டும் பணி தடை இல்லாமல் நடக்க பரிகாரம் இருக்கிறதா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

                                                                ஓம் சிவ சக்தி 



ஒருவருடைய பிறந்த  ஜாதகத்தில் லக்னத்துக்கு நான்காம் இடத்தில சுப கிரகங்கள் இருந்தாலும் சரி சுப கிரகங்கள் பார்த்தாலும் சரி அவருக்கு   பிறக்கும்போதே தனக்கு சொந்தமான வீடு இருக்கும் அமைப்பை பெற்றிருக்கும் பாக்கியசாலியாவார் . லக்னத்துக்கு நான்காம் வீட்டில் சுப கிரகங்கள் இருந்தால் - பார்த்தால் மட்டும் போதாது .

அந்த நான்காம் வீட்டுக்கு உரிய கிரகம் - மறைவு ஸ்தானம் என்று சொல்ல கூடிய லக்னத்துக்கு 6 - 8 - 12 - போன்ற இடங்களில் அமராமல் இருக்கவேண்டும். இப்படி இருந்தாலும் வீடு மனைகாரன் பூமி காரன் என்று சொல்ல கூடிய செவ்வாய் பகவான் அவருடைய ஜாதகத்தில் கேந்திர இடம் என்று சொல்லக்கூடிய லக்னத்துக்கு  (1 - 4 - 7 - 10)- போன்ற இடங்களிலும் திரிகோணம் என்று சொல்லக்கூடிய லக்னத்துக்கு  ( 1 - 5 - 9 -) போன்ற இடங்களில் ஆட்சி - உச்சம் - போன்ற செழிப்பான அமைப்புகளை பெற்றிருக்கும்போழுது அந்த ஜாதகருக்கு வீடு மனை பாக்கியம் சிறப்பாக அமையும்.

சிலருக்கு வீடு மனை யோகம் சிறப்பாக அமைந்து இருந்தாலும் கூட வீடு கட்டும் பணியை தொடங்கி வீட்டு வேலைகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது அவரின் ஜாதகத்தில் தசா புத்தியில் நடைபெறும் கிரகங்களின் செயல்பாடுகளால் வீடு கட்டும் பணியில் தாமதம் ஏற்படும் . அதாவது தினக்கோள்கள் , மாத கோள்கள் , ஒவ்வொரு ராசி கட்டத்தில் , மாறி கோசார ரீதியாக இடம்பெயரும் பொழுது இந்த தடங்கல்களை ஏற்படுத்தும் . இந்த தடங்கல்கள் நீங்க 

இதற்க்கு பரிகாரமாக 

வீடு நல்ல முறையில் கட்ட இந்தியாவில் தமிழகத்தில் உள்ள திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமியை வணங்க வேண்டும். காலையில் நீராடி திருவிளக்கேற்றி இப்பாடலை, 12 முறை படியுங்கள். 

நன்றுடையானை தீயதில்லானை
நரைவெள்ளேறு ஒன்றுடையானை
சென்றடையாத திருவுடையானை 
உமை யொரு பாகம் உடையானை 
சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற 
என்னுள்ளம் குளிரும்மே. 

இந்த பாடலை தினமும் படிக்க  மலைக்கோட்டை மாதிரி உறுதியான வீடு அமைவதோடு மட்டுமல்லாமல் வீடு கட்டும் வேலை எந்த வித தடையுமில்லாமல் நடைபெறும் . 






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment