Friday, July 22, 2022

நவ இரத்தின கற்கள் அணிவதால் நன்மை உண்டா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC .

                       பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 

நவ ரத்தினங்களை நவ மணிகள் என்று கூறுவர் . நவ என்றால் ஒன்பது என்று பொருள் . ஒன்பது நவரத்தினங்களாவன : வைரம் - மரகதம் - நீலம் - கோமேதகம் - முத்து - பவளம் - மாணிக்கம் - புஷ்பராகம் - வைடூரியம் . இவைகளாகும் . இவைகள் தவிர எண்ணற்ற வகை ரத்தினங்கள் இருக்கின்றன

இரத்தினம் என்ற வடமொழி சொல்லை தமிழில் மணி என்பர் . ஆங்கிலத்தில் ஜெம் என குறிப்பிடுவர் . தாதுக்களால் உருவாகும் இந்த இரத்தினங்கள் தாதுக்களால் உருவான நம் உடலுக்கு பொருத்தமானவையே . நம் உடலில் எந்த தாதுக்கள் குறைவாக இருக்கிறதோ அந்த தாதுவின் ஆற்றலை தருவதில் இரத்தினங்கள் சிறப்பு பெற்றவை . 

நம் உடலில் சில தாதுக்கள் குறைவதால் சில நோய்கள் ஏற்படுகின்றன . சில தாதுக்கள் அதிகமாவதாலும் நோய்கள் ஏற்படுகின்றன  என்பது மருத்துவ ஆராய்ச்சிகளின் முடிவு . குறையும் - மிகும் இந்த தாதுக்களை சம நிலையில் வைத்திருக்கும் ஆற்றல் இரத்தினங்களுக்கு உண்டு  என்பது நம் முன்னோர்களின் துணிந்த முடிவு . 



ஒவ்வோர் ராசிக்கு அல்லது பிறந்த நட்சத்திரத்திற்கு அல்லது பிறந்த ஆங்கில தேதிக்கு பொருத்தமான இரத்தினத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் . அதை நமது உடலில் நகையாகவோ மோதிரமாகவோ அணிந்து கொள்ள வேண்டும் . அவ்வாறு செய்தால் நமக்கு தேவையான கிரகத்தின் ஆற்றல் நமக்கு கிடைக்கும் . 

பொருத்தமான ஓர் இரத்தினத்தை நமது உடல் மீது படும்படி அமைத்தால் பொருத்தமான கிரகத்தின் ஒளி அந்த இரத்தினத்தின் வழியாக நம் உடலில் பாய்கிறது . அதனால் நமக்கு வலிமையையும் நன்மையும் ஏற்படுகிறது . நாம் சரியான முறையில் இயங்கி வாழ்க்கையில் வெற்றியை பெறுகிறோம் . இப்படி பெரும் வெற்றியை சிலர் அதிர்ஷ்டம் என்று குறிப்பிடுகிறார்கள் . 

இந்த சின்னஞ்சிறு கற்கள் மூலம் கிரக வலிமை பெற முடியுமா ? குறிப்பிட்ட கிரகம் பறந்து விரிந்து கிடக்கும் உலகிலுள்ள மக்களுள் குறிப்பிட்ட கற்களை அணிந்துள்ளவர்களை கண்டுபிடித்து தன் ஆற்றலை தந்து விடுமா ? என பலர் ஐய்யப்படலாம் . 


எப்படி ரிமோட் கண்ட்ரோல் மூலம் டெலிவிஷனை இயக்குகிறோமோ : எப்படி ரோபோ மூலம் கார்களையும் இரயில்களையும் விமானங்களையும் இயக்குகிறார்களோ : எப்படி கம்ப்யூட்டர் மூலம் ராக்கெட்டுகளையும் அவற்றில் பொருத்தப்பட்டுள்ள புகைப்பட கருவிகளையும் இயக்குகிறார்களோ : அதே போன்றுதான் , இரத்தினங்கள் மூலம் குறிப்பிட்ட கிரகத்தின் ஒளியை பெறுவதும் தமக்கு பொருத்தமில்லாத இரத்தினங்களை அணிவதால் தீமை ஏற்படுவதும் இதே முறையில்தான் . 

ஒவ்வோர் இரத்தினமும் ஒவ்வோர் ஆற்றல் பெற்றவை . அவற்றின் தன்மைகளை விளக்கும் வடமொழியிலுள்ள நூல் ரத்தின பரீட்சை . 

ரத்தின பரீட்சை என்னும் இந்த நூலில் ஒவ்வோர் ரத்தினங்களை சோதிப்பதை பற்றியும் , ஆற்றலுள்ளவை எவை என்பது பற்றியும் - குறிப்பிட்ட இரத்தினத்தை அணிவதால் என்ன பலன் ஏற்படும் என்பதை பற்றியும் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது . 

மாணிக்கம் :
மாணிக்கம் இயற்கையில் சிகப்பு நிறம் வாய்ந்தது . மாசற்ற மாணிக்கத்தை பொருத்தமுள்ளவர்கள் அணிந்தால் பொருட்செல்வத்தையும் அருட்செல்வத்தையும் முக வசீகரத்தையும் பெறுவார்கள் என ரத்தின பரீட்சை நூல் கூறுகிறது . 

நீலம் : 
மயிலின் கழுத்து வண்டுகளின் இறகு சிவபெருமானின் கழுத்து திருமாலின் உடல் வானத்தின் வண்ணம் ஆகியன போன்ற நீலம் போன்றவை தரத்தில் மிக உயர்ந்த நீல ரத்தினமாகும் . பொருத்தமுள்ளவர்கள் நிர்மலமான நீலத்தை அணிந்தால் நீண்ட ஆயுள் பெறலாம் . நிம்மதியான வாழ்வு பெறலாம் நீடித்த செல்வ வளம் பெறலாம் . 

மரகதம்  :

மயிலின் தோகை பச்சை கிளியின் இறகு புதிய பசும்புல் பாசிக்கொத்து வாகை மலர் ஆகிய நிறங்களை உடைய மரகதம் சிறந்தவை . 

குற்றமற்ற நல்ல மரகத கல்லை பொருத்தமானவர்கள் அணிந்து கொண்டால் பகைவர்களை வென்று வெற்றி வாகை சூடுவர் .  உடலிலுள்ள நச்சு தன்மை மாறலாம் . 

மனத்தில் தன்னம்பிக்கை ஏற்படும் . தளராத உறுதி ஏற்படும் . பாவங்களை போக்குவதில் பச்சை மரகதம் சிறந்தது என்று ரத்தின பரீட்சை நூல் கூறுகிறது . 
வைரம் :

வைரத்தை நகைகளில் பதித்து அணிந்தால் வாழ்க்கையில் முன்னேற்ற ஒளி ஏற்படும் . உடல் வலிமை பெரும் . மனம் வலிமை பெரும் . பொருத்தமில்லாதவர்கள் வைரத்தை அணிந்தால் மனக்குழப்பம் - நரம்பு தளர்ச்சி - மலட்டு தன்மை ஏற்பட வாய்ப்புண்டு .

புஷ்பராகம் :

பொன்னிறமான கனமுள்ள - பளபளப்புள்ள தூய்மையான பருமனான தலை போல் வட்ட வடிவமான நெருப்பு துண்டு போன்று ஒளி பரப்பும் தன்மை கொண்ட புஷ்பராகத்தை பயன்படுத்தலாம்.ஆண்மையை பெருக்கி அழகையும் வலிமையையும் தரும் வல்லமை கொண்டது புஷ்பராகம் .

வைடூரியம் :    

வெண்மேகம் போன்ற புகை போன்ற கருநிறம் கலந்த வெண்மையான , வெள்ளி இழையோடிய , பச்சை கலந்த வெண்ணிறமான , கருப்பு நிற நூல் ஓடிய வைடூரியம் மிக சிறந்தது . நன்மை தரும் வைடூரியத்தை பொருத்தமானவர்கள் அணிந்து கொண்டால் செல்வப்பெருக்கும் புகழும் பெறுவார்கள் . உடலில் ஒருவித மினுமினுப்பும் கவர்ச்சியும் ஏற்படும் . 

கோமேதகம் :

தேன்துளி அல்லது கோமூத்திரம் எனும் பசுவின் சிறுநீர் போன்ற நிறமுள்ள கோமேதகம் சிறப்பானது . இந்நிறம் தவிர மாறுபட்ட நிறமுள்ள கோமேதகம் குற்றமுள்ளதாகும் . அணியத்தக்கதல்ல .

பொருத்தமான கோமேதகத்தை அணிந்தால் நோய்கள் ஏற்படாது . இதயம் வலிமை பெரும் உடல் வசீகரம் பெறும் . செல்வச்செழிப்பு ஏற்படும் . 

முத்து :

ஒளி மிகுந்த உருண்டையான முத்துக்களை அணிந்தால் மலட்டு தன்மை நீங்கும் . ஆயுள் விருத்தி ஏற்படும் . நரம்புகள் வலிமை ஏற்படும் . மேனி மினுமினுப்படையும் . முத்துக்களில் பல நிறங்கள் உண்டு . இருப்பினும் வெண்ணிற முத்தும் செந்நிற முத்தும் மிக விசேஷமானவை . 

பவளம் :

முத்தை போன்றே கடலில் விளைவது , பவளம் . செந்நிற பவளங்கள் சிறப்பான ஆற்றல் பெற்றவை . அவை மன நோய்களை தீர்ப்பதில் மகத்தான சக்தி வாய்ந்தவை . பெண்களின் மலட்டு தன்மையை நீக்குகின்றன . பொருத்தமானவர்கள் பவளத்தை அணிந்தால் வாழ்க்கையில் எதிரிகளை வென்று அதிர்ஷ்ட வாய்ப்புகளை அடைவர் . 

முத்தும் பவளமும் மருத்துவ துறையில் மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment