Sunday, December 12, 2021

இருதய நோய் உள்ளவர்கள் குணமாக சென்று வணங்கவேண்டிய வேண்டிய திருக்கோயில் ? இருதய நோய் குணமாக செய்ய வேண்டிய பரிகாரங்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர் இராவணன் BSC

 


இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று வணங்க வேண்டிய திருக்கோயில் அருள்மிகு மனத்துணை நாதர் திருக்கோயில் . 

திருக்கோயில் இந்தியாவில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் வலிவலம் என்ற ஊரில் அமைத்துள்ளது . 

பிரார்த்தனை 

இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் மனக்கலக்கம் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் மனசஞ்சலம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு பலன் அடைகின்றனர் .

நேர்த்திக்கடன் : 

பிரார்த்தனை நிறைவேறியவுடன் பரிகாரமாக ருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது .   


                                              இத்தலத்தின் பெருமை : 

முன்னொரு காலத்தில் ஒழுக்கசீலனாக விளங்கிய ஒருவன் முன் வினைப்பயனால் சில பாவங்கள் செய்தான் . அதனால் அடுத்த பிறவியில் அவன் கரிக்குருவியாக பிறக்க நேரிட்டது . 

மிகச்சிறியதான இப்பறவையை பெரிய பறவை ஒன்று தாக்கியதால் ரத்தம் வந்தது . ரத்த காயமடைந்த குருவி அருகில் உள்ள மரத்தில் தஞ்சம் அடைந்தது . 

அந்த மரத்தின் கீழ் முதிய சிவயோகி ஒருவர் அடியார்களுக்கு  கொண்டிருந்தார் . அன்பர்களே சிவத்தலங்களில் சிறந்தது மதுரை . தீர்த்தங்களில் சிறந்தது அங்கிருக்கும் பொற்றாமரை மும்மூர்த்திகளில் சிறந்தவர் மதுரை சொக்கநாதர் . மதுரைக்கு சமமான சிவத்தலம் உலகில் வேறொன்றும் இல்லை . சோமசுந்தர கடவுள் தன்னை வழிபடுவர்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளி தருபவர்  என்று யோகி சொல்லிக்கொடுத்ததை கரிக்குருவி கேட்டது . ஞானம் பெற்றது . 


பின்னர் தனது முன்பிறப்பையும் தான் ஏன் கரிக்குருவியாக பிறந்தோம் என்பதை அறிந்து மதுரையை நோக்கி பறந்தது . 

மதுரையை அடைந்த குருவி சோமசுந்தர கடவுளை வலம் வந்து வணங்கி பொற்தாமரை குளத்தில் மூழ்கி சிவனை வழிபட்டது . மூன்று நாட்கள் தொடர்ந்து இவ்வாறு வழிபாடு செய்தது . குருவியின் பூஜைக்கு இறைவன் மகிழ்ந்து குருவியை அழைத்து அதற்க்கு மிருத்தியுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார் . 

கரிக்குருவி சிற்றறிவு நீங்கி பேரறிவு பெற்றது . மேலும் அக்குருவி இறைவனிடம் இறைவா நான் சிறிய குருவியாக இருப்பதால் பெரிய பறவைகளால் நான் துன்புறுத்தப்படுகிறேன் . அதனால் எல்லா பறவைகளை விட எனக்கு வலிமையை தரவேண்டும் என்று வேண்டியது . இறைவனும் ஆவார் அருளினார் . இவ்வாறு வரம் பெற்ற கரிக்குருவி வலியான் என பெயர் பெற்றது . 

இதனால் இத்தலத்திற்கு வலிவலம் என பெயர் ஏற்பட்டது . 

தல சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார் . சிவனின் தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 185 வது தேவார தலமாகும் . 


                                                     
திருவிழாக்கள் :

ஆண்டு தோரும் சித்திரையில் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது . தைப்பூசம் மஹா சிவராத்திரி பங்குனி உத்திரம் வைகாசி விசாகம் போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது . 

இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து அருள்மிகு மனத்துணை நாதரை வழிபட விரைவில் குணமடையலாம் .


வாசகர்களின் கவனத்திற்கு  : 


இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையால்   பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்த திருத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்ய விரும்பினால் அந்த பரிகாரத்திற்கு உரிய கட்டணத்தை எங்களுக்கு  செலுத்தினால்  அவர்கள் விருப்பத்தின் பேரில் பரிகாரம் சிறப்பான முறையில் செய்து தரப்படும் . நம்பிக்கையுடன் வாருங்கள் அருள் மிகு மனத்துணை நாதரின் அருளை பெற்று    நலம் பெறலாம் . 







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



 

0 comments:

Post a Comment