Friday, December 10, 2021

சர்க்கரை நோய் நீங்க சென்று வணங்க வேண்டிய திருக்கோயில் ? சர்க்கரை நோய் நீங்க செய்யவேண்டிய பரிகாரம் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

 


சர்க்கரை நோய் உள்ளவர்கள் சென்று வணங்கவேண்டிய திருக்கோயில் அருள் மிகு வெண்ணி கரும்பேஸ்வரர் திருக்கோயில் ஆகும் . இந்த திருக்கோயில் இந்தியாவில் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் தாலுக்காவில்  கோவில்வெண்ணி என்ற ஊரில் அமைந்துள்ளது . 

முற்காலத்தில் இந்த தலம் முழுவதும் கரும்பு காடுகளால் சூழப்பட்டிருந்தது . ஒரு முறை இரு முனிவர்கள் தல யாத்திரை மேற்கொண்டபோது இத்தலம் வந்தனர் . 

அப்பொழுது இந்த கரும்பு காட்டிற்குள் இறைவனின் திருமேனி கண்டு தொழுதனர் . அவர்களில் ஒருவர் இத்தலத்தின் தலவிருட்சம் கரும்பு என்றும் மற்றொருவர் வெண்ணி என்று அழைக்கப்படும் நந்தியாவர்த்தம் என்றும் வாதிட்டனர் . 



இறைவன் அசரீரியாக தோன்றி தனது பெயரில் கரும்பும் தலவிருட்சமாக வெண்ணியும் இருக்கட்டும் என்றருளினார் . அன்று முதல் இறைவன் கரும்பேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் . 

இதுவே வடமொழியில் ராசபுரீஸ்வரர் என்ற பெயர் ஆனது . தலவிருட்சத்தின் பெயரால் வெண்ணியூர் என்றழைக்கப்பட்டது . இதுவே காலப்போக்கில் மருவி கோயில் வெண்ணி ஆனது . 

பிரார்த்தனை : 

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரையையும் ரவையையும் சம அளவில் கலந்து பிரகாரத்தை வலம்வந்து எறும்புக்கு உணவாக இடுகிறார்கள் . 

இதனால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுவதுமாக குணமடைகிறார்கள் என்பது காலம் காலமாக உள்ள இங்குள்ள ஐதீகமாகும் . 


நேர்த்திக்கடன் :

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு சர்க்கரை பொங்கல் வைத்து படைத்து விநியோகம் செய்து வழிபாடு செய்கின்றனர் . 

இத்திருத்தலத்தின் பெருமை :

மிகவும் பழமையான இத்தலத்து இறைவனை 4 யுகங்களிலும் வழிபாடு செய்யப்பட்டுள்ளதாக தல வரலாறு கூறுகிறது . 

இங்கு வீற்றிருக்கும் இறைவனின் திருமேனி அதாவது பாணத்தில் கரும்பு கட்டுகளாக கட்டப்பட்டிருப்பது போன்ற காட்சியுடன் அருள்பாலிக்கிறார் . 

கரிகாற் சோழன் தனது 18 வது வயதில் இங்குள்ள பிடாரி அம்மனை வழிபட்டு சேர சோழ குறு நில மன்னர்களை எதிர்த்து போர் செய்து வெற்றி பெற்றான் . கரிகாற் சோழன் பெற்ற இந்த வெற்றியே மாபெரும் வெற்றி என்று இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது . 


இங்குள்ள பிடாரி அம்மனை வழிபடுவர்களுக்கு எதிரி பயம் இருக்காது என்பது ஐதீகம் .

தான் பெற்ற வெற்றியை கொண்டாடும் விதத்தில் கரிகாற் சோழனும் முசுகுந்த சக்கரவர்த்தியும் இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளதாக தல வரலாறு கூறுகிறது . 

இத்திருக்கோயிலின் சிறப்பம்சம் :

பங்குனி மாதம் 2 3 4 தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது . 

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் . 

சிவனின் தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 165 வது தேவார தலமாகும் . 


                                                    இத்தல திருவிழா : 

நவராத்திரி 9 நாட்களிலும் திருவிழா இங்கு கொண்டாடப்படுகிறது . 

பங்குனி உத்திரம் வைகாசி விசாகம் சித்திரா பௌர்ணமி ஆணி திருமஞ்சனம் திருக்கார்த்திகை திருவாதிரை தைப்பூசம் மாசி மகம் ஆகிய திருவிழாக்கள் திருத்தலத்தில் கொண்டாடப்படுகிறது . 

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருத்தலத்தில் வீற்றிருக்கும் வெண்ணி கரும்பேஸ்வரரை வழிபட்டு குணமடையுங்கள் .  

வாசகர்களின் கவனத்திற்கு  : 

தீராத சர்க்கரை நோயால்  பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்த திருத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்ய விரும்பினால் அந்த பரிகாரத்திற்கு உரிய கட்டணத்தை செலுத்தினால்  அவர்கள் விருப்பத்தின் பேரில் பரிகாரம் சிறப்பான முறையில் செய்து தரப்படும் . நம்பிக்கையுடன் வாருங்கள் அருள் மிகு வெண்ணி கருபேஸ்வரர்  அருளால் நலம் பெறலாம் . 







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328





0 comments:

Post a Comment