Sunday, December 30, 2018

கன்னி ராசி - 2019 - ஆங்கில புத்தாண்டு பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                   தாயே பூமாதேவி 
மகா விஷ்ணுவை அதி கடவுளாக கொண்ட கன்னி ராசி அன்பர்களே உங்கள் உங்களின் ராசிக்கு 2-ல் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும் நிலையில் வருடம் பிறப்பதால், பணவரவுக்குக் குறைவிருக்காது. தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறும். உற்சாகமாக வலம் வருவீர்கள். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். 

உங்களின் ராசிக்கு அதிபதியான ராசிநாதன் புதன் சாதகமான வீட்டில் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால்,நண்பர்களின் உதவி கிடைக்கும். நல்ல வசதியான வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். வீட்டில் ஏற்பட்டிருந்த பழுதுகள் நீங்கும். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வேற்று மொழி பேசுபவரின் ஆதரவு கிடைக்கும். 

உங்களுக்கு அனுகூலமாக இருக்கும் குலதெய்வக் கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்வீர்கள். புது வேலை கிடைக்கும். கைமாற்றாக வாங்கி இருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

யோககாரகன் ராகு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைத்து மகிழ்வீர்கள். இந்த வருடம் முதல் 12.2.19 வரை ராசிக்கு 5-ல் கேது இருப்பதால், பிள்ளைகள் அடிக்கடி கோபப்படுவார்கள். அவர்களிடம் உங்கள் எண்ணங்களைத் திணிக்கவேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள சுமைகளைத் தூக்கவேண்டாம். பூர்வீகச் சொத்தை சரியாகப் பராமரிக்க முடியவில்லையே என்று வருத்தப்படுவீர்கள். 

மற்றவர்கள் கண்டு பொறாமைப்படும் அளவுக்கு வெளிவட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. ஆனால், 13.2.19 முதல் வருடம் முடியும் வரை கேது 4-லும் ராகு 10-லும் இருப்பதால் சுற்றியிருப்பவர்களைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்வீர்கள். எதிர்காலம் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது.

ஆண்டின் தொடக்கம் முதல் முடியும் வரை சனி சாதகமாக இல்லாத காரணத்தால் மனத்தாங்கல் காரணமாக தாயாரைப் பிரிய நேரிடும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு நீங்கும். வீட்டில் களவு போக வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வழக்குகளால் மன அமைதி பாதிக்கப்படக்கூடும்.

நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு ராசிக்கு 3-ல் நிற்பதால்,  ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேளைகள் பார்க்க நேரிடும். ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரை குரு அதிசாரத்திலும் மற்றும் 28.10.19 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 4-ல் அமர்வதால், இழுபறியாக இருக்கும் வேலைகள் முடியும். 

ஆனால், தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவருக்கு சிறுசிறு அறுவைச் சிகிச்சைகள் செய்ய நேரிடும். பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. தாயாருடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. சொத்து வாங்கும்போது சட்ட நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்வது நல்லது. உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும்.

வியாபாரம் செய்யும் வியாபாரிகளே! லாபம் அதிகரிக்கும். தேங்கிக் கிடக்கும் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். அதிரடி சலுகைகளை அறிவித்து விற்பனையை அதிகரிப்பீர்கள். பங்குதாரர்கள் வழக்கம்போல் முணுமுணுப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. வேற்று மாநிலத்தைச் சேர்ந்த வேலையாள் களால் நிம்மதி கிடைக்கும். 

உங்களின் நிறுவனத்தில் லாபம் ஈட்டுவதோடு மட்டுமல்லாமல் புதிய கிளைகள் தொடங்கும் வாய்ப்பு ஏற்படும். ஏற்றுமதி - இறக்குமதி, கன்ஸ்ட்ரக்‌ஷன், பவர் புராஜெக்ட் வகைகளால் ஆதாயம் உண்டாகும்.பெரிய வியாபாரிகளின் அறிமுகம் கிடைக்கும். 

பணிபுரியும் அலுவலகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை கூடும்.  உத்தியோகஸ்தர்களே! கூடுதல் நேரம் உழைத்தாலும் உரிய அங்கீகாரம் கிடைக்காது. ஆனால்,  உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களுக்காக வாதாடி அவர்களுக்கு உரிய சலுகைகளைப் பெற்றுத் தருவீர்கள். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். 

கல்வி பயிலும் செல்வங்களே ! கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். கலைப்போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். பெற்றோர் அரவணைத்துச் செல்வார்கள்.

இந்த வருடம் மனநிம்மதியையும் ஓரளவு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி, சமூகத்தில் உங்களுக்கு அந்தஸ்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம் : நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபடவும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328





0 comments:

Post a Comment