Monday, December 31, 2018

மகர ராசி - 2019 - ஆங்கில புத்தாண்டு பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                               தாயே  பூமாதேவி
                  சனிபகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட மகர ராசி அன்பர்களே ******

உங்களின் ராசிக்கு ராஜ்ய ஸ்தானமான  10-ம் வீட்டில் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், இழப்புகள், ஏமாற்றங்களில் இருந்து விடுபடுவீர்கள். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். சின்னச் சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வீர்கள். மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். 

கவுரவமான நல்ல வேலைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வீடு, வாகன வசதிகள் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

பூர்வ ஜனம் புண்ணிய ஸ்தானமான 5-ல் செவ்வாய் அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், வீடு, மனை வாங்குவது விற்பது சுலபமாக முடியும். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். கடனாக வாங்கிய பணத்தைத் தந்து முடிப்பீர்கள். நீண்ட நாளாகத் தேடியும் கிடைக்காத முக்கிய ஆவணம் கைக்குக் கிடைக்கும். 

பாச மிகு மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்தி முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். முக்கிய பிரமுகர்களின் ஆதரவால் சில காரியங்களை சுலபமாக முடிப்பீர்கள்.

உங்களின் ராசியில் ஞானகாரகன் கேதுவும் ஏழாம் இடத்தில     7-ல் ராகுவும் 12.2.19 வரை இருப்பதால், தலைச்சுற்றல், தூக்கமின்மை, செரிமானக் கோளாறு, மன இறுக்கம் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் வந்து போகும். வாழ்க்கைத்துணைக்கு தைராய்டு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். ஆனால், 13.2.19 முதல் வருடம் முடியும் வரை கேது 12-லும் ராகு 6-லும் இருப்பதால், மனக்குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். 

நியாயமாக வந்த பணம் கைவிட்டு போய்விட்டதே என்று ஏங்கிய உங்களின் மனப்படி மறுபடியும் உங்களின் கைக்கு வந்து சேரும் . உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். எ வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமணத்தடை நீங்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஷேர் மூலம் பணம் வரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

வேண்டாத சிநேகிதர்களால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் ஜாக்கிரதை . வருடம் முழுவதும் சனி விரயச் சனியாக இருப்பதால், அநாவசிய செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். வேலைச்சுமை அதிகரிக்கும். கனவுத் தொல்லையால் உறக்கம் குறையும். கடந்து போன கசப்பான விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம்.  கடன்களால் கௌரவம் குறைந்துவிடுமோ என்று அடிக்கடி கவலைப் படுவீர்கள்.

நீங்கள் எதிர்பார்க்காத தருணமாகிய இந்த காலகட்டத்தில் புதுப் பதவிகள் தேடி வரும்.  வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு லாப வீட்டில் இருப்பதால், உங்களின் செல்வம், செல்வாக்கு கூடும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.  சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தும் எண்ணம் நிறைவேறும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். 

அதிர்ஷ்டமான இடத்தில இருந்து திருமணப் பேச்சு வார்த்தை நல்லபடி முடியும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரமாகவும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரப்படியும் குரு 12-ல் மறைவதால், வீண்செலவுகளால் கையிருப்பு கரையும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். 

உங்களுக்கு லாபத்தை தரக்கூடிய திடீர் பயணங்கள் ஏற்படும். உங்களைப் பற்றிய வதந்திகள் ஏற்படும். பழைய கடன்களை நினைத்து அடிக்கடி கவலைப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

புது வகையான வியாபாரத்தில் இறங்குவதை தவிருங்கள் . வியாபாரிகளே! விரயச் சனி தொடர்வதால், பெரிய முதலீடுகள் செய்வதையும் தவிர்ப்பது நல்லது. போட்டிகளைச் சமாளிக்க புது திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வேலையாள்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. தள்ளிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். ஏற்றுமதி-இறக்குமதி, எண்டர்பிரைசஸ், மரம், ஸ்டேஷனரி, கல்வி நிறுவனங்கள், எரிபொருள்கள் வகைகளால் ஆதாயம் உண்டாகும்.

வேலை பார்க்கும் இடத்தில் சின்னச் சின்ன அவமானங்களைச் சந்திக்கவேண்டி வரும். ஆனாலும், உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல நல்ல வாய்ப்புகள் ஏற்படும். சூழ்ச்சிகளையும் தாண்டி அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பார்கள். இழந்த சலுகைகளை திரும்பப் பெறுவீர்கள். 

கல்வி பயிலும் செல்வங்களே படிப்பதுடன் படித்தவற்றை மறுபடி எழுதிப் பார்ப்பது அவசியம். கடினமாக உழைத்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற முடியும். கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

வேற்று மாநில நபர்களால் -  வேற்று மொழி வாய்ப்புகளால் கலைத்துறையினர் புகழ் அடைவார்கள் . புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்.  தடைகள் ஏற்பட்டாலும் முயற்சியினால் முன்னேற்றம் ஏற்படும் வருடமாக அமையும்.

பரிகாரம் : 1

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் .

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று சனி பகவானுக்கு கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 
பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .





உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328




0 comments:

Post a Comment