Sunday, December 30, 2018

விருச்சிக ராசி - 2019 - ஆங்கில புத்தாண்டு பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                     தாயே பூமாதேவி
முருகப்பெருமானை அதி கடவுளாக கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 12-ல் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும் வேளையில் வருடம் பிறப்பதால், சின்னச் சின்ன கனவுகள் நிறைவேறும். கடன் பிரச்னைகளை இதமாகப் பேசி சமாளிப்பீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவி செய்வீர்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். விலை உயர்ந்த நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். 


பாக்கிய ஸ்தானம் என்று சொல்ல கூடிய ராசிக்கு 9-ல் ராகு இருப்பதால், எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வருடத் தொடக்கத்திலிருந்து 12.2.19 வரை ராசிக்கு 3-ல் கேது இருப்பதால், எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்.  தந்தையாருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். அடிக்கடி வீண் டென்ஷன் ஏற்படும். தந்தையுடன் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். 

சந்தோஷமான உறவுகள் வைத்திருந்த தந்தைவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். 13.2.19 முதல் கேது 2-லும், ராகு 8-லும் இருப்பதால், மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. கண்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது. 

நெருங்கிய சிநேகிதம் - நெருங்கிய உறவினர்கள் என்ற எண்ணத்தில் மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வருடம் முழுவதும் ஏழரைச் சனியில் பாதச் சனி நடப்பதால், பல் வலி, காது வலி ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளை எதற்கும் வற்புறுத்தவேண்டாம். கூடுமானவரை அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். வெளியிடங்களில் முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டாம். பணப்பற்றாக்குறை ஏற்படும்.


புத்திர ஸ்தானமான 5 ம் இடத்தில ராசிநாதன் செவ்வாய் 5-ல் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. குழந்தையின் வளர்ச்சியை அடிக்கடி பரிசோதித்துக்கொள்வது நல்லது. சகோதரர்களால் அலைச்சலும் செலவுகளும் இருக்கும். மற்றவர்களை விமர்சித்துப் பேசுவதைத் தவிர்க்கவும். பூர்வீக சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்க்க முயற்சி செய்யவும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்துகொள்ளுங்கள். அவர்கள் விரும்பும் கல்விப் பிரிவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள். 


ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் உள்ள குடும்பத்தில் அடிக்கடி சச்சரவுகள் ஏற்படக்கூடும்.வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு உங்கள் ராசியில் அமர்ந்து ஜன்ம குருவாக இருப்பதால், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். மஞ்சள்காமாலை, தலைச்சுற்றல், காய்ச்சல் ஏற்பட்டு நீங்கும்.  வாழ்க்கையில் பிடிப்பின்மை ஏற்பட்டு நீங்கும். ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரமாகவும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரப்படியும் குரு உங்கள் ராசிக்கு 2-ல் அமர்வதால், பணவரவு அதிகரிக்கும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேர்வீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஒதுங்கி இருந்த உறவினர்களும் நண்பர்களும் வலிய வந்து உறவாடுவார்கள். புது வீடு கட்டி கிரகபிரவேசம் செய்வீர்கள். 

கணினி சம்பந்தப்பட்ட துறைகளில் லாபம் உண்டாகும் வியாபாரிகளுக்கு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். வேலையாள்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களைக் கவர புதுப் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். ஆடை வடிவமைப்பு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும்.


பதவி உயர்வு,கட்டாயம் உண்டு . உங்கள் நிர்வாகத் திறமை கூடும். பாரபட்சமாக நடந்துகொண்ட அதிகாரி உங்களைப் பாராட்டும் நிலை ஏற்படும். கூடுதல் சலுகைகள் கிடைக்கும். இடமாற்றம் ஏற்பட்டாலும் அதனால் நன்மையே உண்டாகும். ஆனால், ஏழரைச் சனி தொடர்வதால் மறைமுக பிரச்னைகள் இருக்கும். சக ஊழியர்களுடன் அளவோடு பழகவும்.  சம்பள உயர்வு போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம். 


கல்வி செல்வங்களே தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்கள் உங்கள் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார்கள். பெற்றோர் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். 


சாதித்து முத்திரை பதிக்கவேண்டும் என்று நினைக்கும் கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் முன்னேறுவீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். 

வெற்றி வாய்ப்புகளும் பொருளாதாரத்தில் முன்னேற்றமும் ஏற்படுவதுடன் இந்த வருடம் உங்கள் திறமைகளை அதிகப்படுத்துவதுடன் கூடிய வாய்ப்புகளும் உண்டாகும் .


பரிகாரம்:  தமிழகத்தில் சீர்காழிக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்குள்ள அங்காரகனை வழிபட சகல பிரச்சனைகளும் தீரும் .




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328





0 comments:

Post a Comment