Saturday, December 29, 2018

மேஷ ராசி - 2019 - ஆங்கில புத்தாண்டு பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர்- ஆர். இராவணன் BSC

 

                                 மேஷ ராசி - 2019 -  ஆங்கில புத்தாண்டு பலன்கள் : 

எந்த ஒரு சூழ்நிலையிலும் தான் முன்னே நின்று வெற்றி வாகை சூடும் மேஷ ராசி அன்பர்களே ,உங்களின் ராசிக்கு 7-ம் வீட்டில் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும் வேளையில் வருடம் பிறப்பதால், உங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்த நல்ல நல்ல வாய்ப்புகள் ஏற்படும். 

என்றும் இளமை மாறாத பொலிவுடன் உள்ள உங்களின் அழகு, ஆரோக்கியம் கூடும். வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். தடைப்பட்டு வந்த காரியங்கள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். ஆனால், வருடம் பிறக்கும்போது ராசிநாதன் செவ்வாய் - 12-ல் இருப்பதால், திடீர் பயணங்களும், அலைச்சலும் ஏற்படும்.சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சகோதர வகையில் மனக் கசப்புகள் அதிகரிக்கும்.

கோச்சாரப்படி வருகின்ற 12.2.19 வரை ராசிக்கு 10-ல் கேதுவும், 4-ம் வீட்டில் ராகுவும் இருப்பதால், மறைமுக நெருக்கடிகள், தாயாருக்கு முதுகுத் தண்டவடத்தில் வலி, தலைச்சுற்றல் வந்து செல்லும். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 9-ல் கேது அமர்வதால், பிதுர்வழிச் சொத்தில் பிரச்னைகள் ஏற்படும். 

பாசமிகு தந்தையின் உடல் நலனில் கவனம் தேவைப்படும். அவருடன் மன வருத்தங்கள் ஏற்பட்டு நீங்கும். ஆனால், ராகு 3-ல் இருப்பதால், மனதில் தைரியம் அதிகரிக்கும். தடைப்பட்ட விஷயங்கள் அனுகூலமாக முடியும். இளைய சகோதர வகையில் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும்.

இந்த வருடம் முழுவதும் சனி 9-ல் இருப்பதால், தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். 


குடும்பத்திற்கு தேவையான அவசியமான செலவுகள் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் வரும்.வருடம் பிறக்கும்போது புதன் சாதகமான வீட்டில் இருப்பதால், உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்தி முடிப்பீர்கள்.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை பிறகு 19.5.19 முதல் 27.10.19 வரை குரு உங்கள் ராசிக்கு 8-ல் இருப்பதால், வீண் அலைக்கழிப்புகள் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும்.
நீங்கள் நினைத்து பார்க்க முடியாத பயணங்களாலும் அதனால் அதிகரிக்கும் செலவுகளாலும் திணறுவீர்கள். ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரை குருபகவான் அதிசாரமாகவும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை 9-ம் வீட்டில் அமர்வதால், செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு. பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தவோ அல்லது புதுப்பிக்கவோ செய்வீர்கள். தந்தையுடன் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கும்.

மூலதனத்தை  போட்டு தொழில் செய்யும் வியாபாரிகளே! பற்று வரவு கணிசமாக உயரும். வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு விற்பனையைப் பெருக்குவீர்கள். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். கமிஷன், பதிப்பகம், வாகன உதிரி பாகங்கள் வகையில் லாபம் கிடைக்கும்.

அரசாங்க உத்தியோகமானாலும் , தனியார் உத்தியோகமானாலும் - அயராது உழைக்கும் உத்தியோகஸ்தர்களே! குரு 8-ல் இருப்பதால் சின்னச் சின்ன அலைக்கழிப்புகள் இருக்கும். மேலதிகாரிகளின் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டாம். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகவும். இடமாற்றம் ஏற்படக்கூடும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

கல்வி பயிலும் மாணவ செல்வங்களே ! உங்கள் திறமைகளை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். உங்கள் சந்தேகங்களை ஆசிரியர்களிடன் உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.

வாழ்க்கையில் ஏழாவது ஒன்று சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விடா முயற்சியுடன் செயல்படும்  கலைத்துறையினரே! சின்னச் சின்ன தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும், புகழும் கௌரவமும் கூடும். பழைய சம்பள பாக்கி கைக்கு வரும்.வருடத்தின் முற்பகுதி மனதில் சலனத்தை ஏற்படுத்தினாலும், பிற்பகுதி சாதிக்க வைக்கும்.

பரிகாரம்: செவ்வாய் கிழமை அன்று முருக பெருமானுக்கு சிகப்பு நிற வஸ்திரத்தை சாத்தி வழிபடவும் .






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment