Sunday, December 30, 2018

சிம்ம ராசி - 2019 - ஆங்கில புத்தாண்டு பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                    தாயே பூமாதேவி
சிவபெருமானை ராசியின் அதி கடவுளாக கொண்ட சிம்ம ராசி அன்பர்களே உங்களின் ராசிக்கு 3-ல் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும்போது வருடம் பிறப்பதால், சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு கணிசமாக உயரும். இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும். ராசிக்கு 5-ல் புதன் இருக்கும்போது வருடம் பிறப்பதால் பிரபலங்களின் தொடர்பு பயனுள்ளதாக அமையும்.  

வேண்டாம் என்று விலகி சென்ற சொந்த பந்தங்களும் நண்பர்களும் தேடி வருவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் பிடிவாதப் போக்கு மாறும். விலையுயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள்.

ஞானகாரகன் என்று சொல்லக்கூடிய கேது பகவான் உங்களின்  ராசிக்கு 6-ல்  இருப்பதால், உங்களுடன் பழகும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உண்மையான மனநிலையைப் புரிந்துகொள்வீர்கள். மகான்கள், ஆன்மிக அறிஞர்களின் சந்திப்பும் அவர்களுடைய ஆசிகளைப் பெறும் வாய்ப்பும் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். 

இருந்தாலும் யோககாரகன் ராகு உங்களின் , ராசிக்கு 12-ல்  இருப்பதால், மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்காதீர்கள். கடந்த காலங்களில் ஏற்பட்ட ஏமாற்றங்களை எண்ணி அடிக்கடி வருந்துவீர்கள். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை கேது 5-ல் அமர்வதால் பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு உற்சாகமூட்ட முயற்சி செய்யவும். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் சற்று தாமதமாக முடியும். 

காலம் காலமாக காத்து வந்த உங்களின் பூர்வீகச் சொத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். ஆனால், ராகு 11-ல் இருப்பதால், சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் வளரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக்கொண்டு மக்களுக்கு சேவை செய்வீர்கள்.

பூர்வ ஜென்ம புண்ணிய ஸ்தானமான 5 ம் இடத்தில வருடம் முழுவதும் சனி 5-ல் இருப்பதால், அடிக்கடி மனக்குழப்பம் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பான முயற்சிகள் தாமதமாகும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது.கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டாம். பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் ஏற்பட்டு நீங்கும்.

மறைவு ஸ்தானமான உங்களின் ராசிக்கு  8-ல் செவ்வாய் நிற்கும்போது இந்த வருடம் பிறப்பதால், உடன்பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். சொத்துப் பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணைக்கு சிறுசிறு அறுவைச் சிகிச்சைகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் வழக்கறிஞரின் ஆலோசனை கேட்டு முடிவு எடுப்பது நல்லது.

தன காரகன் - புத்திர காரகன் என்று சொல்ல கூடிய குரு வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு 4-ல் இருப்பதால், வேலைச்சுமையின் காரணமாக எப்போதும் பதற்றத்துடன் காணப்படுவீர்கள். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வாகனம் அடிக்கடி பழுதாகும். ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரை குருபகவான் அதிசாரமாகவும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 5-ல் குரு இருப்பதால், மன இறுக்கங்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். 

வெகு நாளைய ஆசையுடன் புது வீடு கட்டி குடிபுகும் வாய்ப்பு ஏற்படும். வருமானத்தை உயர்த்திக்கொள்ள புதுப் புது வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கு திரும்பக் கிடைக்கும்.

வாகன உதிரி பாகங்களால் ஆதாயம் உண்டாகும்.வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு வருட முற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். வேலையாள்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்வது அவசியம். பழைய பாக்கிகளை கனிவாகப் பேசி வாங்கவும். பங்குதாரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். அரிசி, மலர்கள், எலெக்ட்ரிகல்ஸ்,

பணி புரியும உத்தியோகஸ்தர்களே! பிப்ரவரி 13-ம் தேதி முதல் ராகு சாதகமாக இருப்பதால், அலுவலகத்தில் மரியாதை கூடும். ஆனால், பணிச்சுமை அதிகரிக்கும். சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதல் பணிகளை ஒப்படைப்பார்கள். சலித்துக்கொள்ளாமல் முடித்துக்கொடுப்பது நல்லது. உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது. 

உத்தியோகத்தில் பதவி உயர்வு தள்ளிப் போகும். சக ஊழியர்களால் மன உளைச்சல் ஏற்படும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.

கல்வி பயிலும்  செல்வங்களே ! படிப்பில் முழுமையான கவனம் செலுத்தவேண்டியது அவசியம். பொறுப்பு உணர்ந்து படித்தால்தான் நல்லமுறையில் தேர்ச்சி பெறமுடியும். விளையாடும்போது கவனமாக இருக்கவும். வருடத் தொடக்கம் அலைச்சலையும் வருடத்தின் மத்திய பகுதியிலிருந்து முன்னேற்றத்துடன் ஆதாயமும் தருவதாக இருக்கும்.

பரிகாரம் : கிருத்திகை - உத்திரம் - உத்திராடம் - இவைகள் சூரியனுக்கு உரிய நட்சத்திரங்கள் - இந்த நட்சத்திர கால நேரங்களில் சூரியனின் அதி தேவதையான சிவபெருமானை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328





0 comments:

Post a Comment