Sunday, December 30, 2018

கடக ராசி - 2019 - ஆங்கில புத்தாண்டு பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                    தாயே பூமாதேவி
சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட கடக ராசி அன்பர்களே : உங்களின் ராசிக்கு 4-ல் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும் வேளையில் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். முக்கியப் பிரமுகர்களின் வரிசையில் இடம் பிடிக்கும் அளவுக்கு சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அரைகுறையாக நின்றுவிட்ட கட்டடப் பணியை மறுபடியும் கட்டி முடிக்கத் தேவையான வங்கிக் கடனுதவி கிடைக்கும். தாய்மாமன், அத்தை வழியில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

பூமிக்காரன் என்று சொல்லக்கூடிய செவ்வாய் இந்த வருடம் பிறக்கும்பொழுது 9-ல் இருப்பதால் தொட்ட காரியம் வெற்றியடையும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். பாதிப் பணம் தந்து முடிக்காமல் பத்திரப் பதிவு செய்யாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு முடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். நவீன ரக மின்சார சாதனங்களை வாங்குவீர்கள். 

கடக ராசியான உங்களின் ராசிக்கு ராசிக்கு 12.2.19 வரை 7-ல் கேது நிற்பதால், மூச்சுத் திணறல், அல்சர், ரத்த சோகை ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் - மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. முன்கோபத்தைத் தவிர்ப்பது அவசியம். 

காதல் மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராகு 12-லும் கேது 6-லும் இருப்பதால், மனப் போராட்டங்கள் ஓயும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். கோயில் திருப்பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். விலகிச் சென்ற உ றவினர்கள் விரும்பி வருவார்கள். சோர்வு நீங்கி உற்சாகமாகக் காணப்படுவீர்கள். மற்றவர்களை சரியாகப் புரிந்துகொள்வீர்கள்.

மறைவு ஸ்தானமான ராசிக்கு 6-ல் புதன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், உறவினர்கள், நண்பர்களுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

ஆண்டின் தொடக்கம் முதல் 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.20.19 வரை குரு ராசிக்கு 5-ல் இருப்பதால், நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள், பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர் கல்வி, உத்தியோகம் சிறப்பான முறையில் அமையும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். 

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் , 13.3.19 முதல் 18.5.19 வரை மற்றும் 28.10.19 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ல் மறைவதால், சின்னச் சின்ன வேலைகளைக் கூட ஒருமுறைக்கு இரண்டுமுறை போராடித்தான் முடிக்கவேண்டி வரும். எதிர்காலம் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுடன் பகை ஏற்படாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். சிலர் தங்களுடைய ஆதாயத்துக்காக உங்களைப் பற்றி வீண் வதந்திகளைப் பரப்புவார்கள் என்பதால் கவனம் தேவை. 

வெளிநாட்டில் இருப்பவர்களால் நல்ல திருப்பம் ஏற்படும்.  வருடம் முழுவதும் ராசிக்கு 6-ல் சனி இருப்பதால், எதிரிகளும் நட்பு பாராட்டி வருவார்கள். பாதியில் நின்ற கட்டடப் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். தேவையான வங்கிக் கடனுதவி கிடைக்கும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். புது வேலை கிடைக்கும்.

லாபத்தைக் குறைத்து விற்று வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பீர்கள். வியாபாரிகளே! பற்று வரவு கணிசமாக உயரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். வேலையாள்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். பங்குதாரர்கள் சற்று முரண்டு பிடிப்பார்கள்.  கமிஷன், பதிப்பகம், சிமெண்ட், மருந்து வகைகளால் ஆதாயம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களே! பணிச்சுமை அதிகரிக்கும். 

ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். பிப்ரவரி 13-ம் தேதி முதல் எதிர்ப்புகள் விலகும். உங்கள் மீது வீண்பழி சுமத்திய அதிகாரி மாற்றப்படுவார். புது அதிகாரி அனுசரணையாக நடந்துகொள்வார். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.

கல்வி பயிலும் மாணவர்களே! நினைவாற்றல் அதிகரிக்கும். சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

புது வருடம் கலைத்துறையினருக்குயோகமாக அமையும்   புதுமையாகச் சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் கவர்வீர்கள்.

ஆண்டின்  முற்பகுதி அலைச்சலையும் ஆரோக்கியக் குறைவையும் தந்தாலும், பிற்பகுதி அதிரடி முன்னேற்றங்களைத் தருவதாக அமையும். 

பரிகாரம்: தஞ்சாவூர் நாதன் கோயில் நந்திபுர விண்ணகர பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளையும் தாயாரையும் தரிசித்து விட்டு வெண்பொங்கல் சாதம் விநியோகம் செய்துவிட்டு வருவது நல்லது . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328








0 comments:

Post a Comment