Wednesday, July 18, 2018

மேஷ ராசிக்காரர்கள் அணிய வேண்டிய நவரத்ன மோதிரங்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷட எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                                                  ஓம் சிவசக்தி  
நம் உடலில் சில தாதுக்கள் குறைவதால் சில நோய்கள் ஏற்படுகின்றன . சில தாதுக்கள் அதிகமாவதாலும் நோய்கள் ஏற்படுகின்றன  என்பது மருத்துவ ஆராய்ச்சிகளின் முடிவு . குறையும் - மிகும் இந்த தாதுக்களை சம நிலையில் வைத்திருக்கும் ஆற்றல் இரத்தினங்களுக்கு உண்டு  என்பது நம் முன்னோர்களின் துணிந்த முடிவு . 

ஒவ்வோர் ராசிக்கு அல்லது பிறந்த நட்சத்திரத்திற்கு அல்லது பிறந்த ஆங்கில தேதிக்கு பொருத்தமான இரத்தினத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் . அதை நமது உடலில் நகையாகவோ மோதிரமாகவோ அணிந்து கொள்ள வேண்டும் . அவ்வாறு செய்தால் நமக்கு தேவையான கிரகத்தின் ஆற்றல் நமக்கு கிடைக்கும் . 

பொருத்தமான ஓர் இரத்தினத்தை நமது உடல் மீது படும்படி அமைத்தால் பொருத்தமான கிரகத்தின் ஒளி அந்த இரத்தினத்தின் வழியாக நம் உடலில் பாய்கிறது . அதனால் நமக்கு வலிமையையும் நன்மையும் ஏற்படுகிறது . நாம் சரியான முறையில் இயங்கி வாழ்க்கையில் வெற்றியை பெறுகிறோம் . இப்படி பெரும் வெற்றியை சிலர் அதிர்ஷ்டம் என்று குறிப்பிடுகிறார்கள் .


மேஷ ராசிக்காரர்கள் அணிய வேண்டிய நவரத்தின மோதிரம் :


மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய் . செவ்வாய் கிரகத்திற்கு உரிய பவளத்தை மோதிரத்தில் அமைத்து அணிந்து கொள்ளவேண்டும் . இந்த ராசிக்கு அதிபதியான செவ்வாய் அவர்களுடைய ஜாதகத்தில் நீச்சம் அடைந்திருந்தாலோ அல்லது 6 - 8 - 12 - போன்ற மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ அல்லது பகை வீடுகளில் இருந்தாலோ அதனால் ஏற்படும் பதிப்புகளில் இருந்து பாதுகாக்க இந்த பவளம் பயன்படும் . 

செவ்வாய் அவரவர் ஜாதகத்தில் நீச்ச ஸ்தானங்களில் இருந்தாலும் பகை ஸ்தானங்களில் இருந்தாலும் அடிமை தொழில் செய்யும் நிலை ஏற்படும் . பவளத்தை அணிந்து கொண்டால் சுய தொழில் அமைக்கவோ பதவி உயர்வு கிடைக்கவோ வாய்ப்பு ஏற்படும் . 


மேஷ ராசிக்காரர்கள் பலருக்கு வயிற்றில் ஏதாவது ஒரு நோய் ஏற்பட வாய்ப்புண்டு . இப்படி நோயுள்ளவர்கள் பவளத்தை அணிந்தால் நற்பலன்கள் கிட்டும் . மூளை வலிமை பெரும் . ரத்த நாளங்கள் சரியாக இயங்கும் . 

முத்தை போன்றே கடலில் விளைவது , பவளம் . செந்நிற பவளங்கள் சிறப்பான ஆற்றல் பெற்றவை . அவை மன நோய்களை தீர்ப்பதில் மகத்தான சக்தி வாய்ந்தவை . பெண்களின் மலட்டு தன்மையை நீக்குகின்றன . பொருத்தமானவர்கள் பவளத்தை அணிந்தால் வாழ்க்கையில் எதிரிகளை வென்று அதிர்ஷ்ட வாய்ப்புகளை அடைவர் . 

மேஷ ராசிக்காரர்களுக்கு மட்டுமே பவளம் இப்படி தனிப்பட்ட பலன்களை தரும் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328




0 comments:

Post a Comment