Friday, July 6, 2018

இன்று 6 - 7 - 2018 வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC

                                                    ஓம் சிவ சக்தி
இன்று 6 - 7 - 2018 ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியினுடைய ஹீப்ரு பிரமிடு எண் 29 . இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் :

2 என்ற சந்திரனும் - 9 என்ற செவ்வாயும் - இணைந்த இந்த எண்கள் சந்திரனின் ஆதிக்கத்தை பிரதி பலிக்கிறது . கடக ராசியில் வருவது இந்த எண்ணாகும் . " காலடியில் மூன்று மகுடங்கள் " என மந்திர சாஸ்திர நூல்களிலும் - " மூன்று செங்கோல்கள் ஊன்றப்பட்ட இடத்தில் மனிதன் நிற்பதை போன்ற சித்திரங்கள் எகிப்திய பிரமிடுகளில் காணப்படுகிறது .   

கடக ராசியில் இந்த 29 ம் எண்  இடம்பெறுவதால் - 2 என்ற சந்திரனின் ஆட்சி பலத்தையும் - 9 என்ற செவ்வாயின் நீச்ச பலத்தையும் - இவ்வெண் தெரிவிக்கிறது ." நீச்ச பங்க ராஜ யோகம் என்றும் " " சந்திர மங்கள யோகம் என்றும் இந்த 29 ம் எண்ணை குறிப்பிடலாம் . 

பூமி லாபமும் - ரியல் எஸ்டேட் தொழில் விருத்தியும் - பெண்களுக்கு மங்களகரமான வாழ்க்கையையும் - சுக பிரசவமும் - கற்பனை திறனுள்ள துறைகளில் மேன்மையும் - நீர் சம்பந்தப்பட்ட தொழில்களால் ஏற்றமும் உண்டாகும் . 

ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் 29 பாடல்களால்  தருவதை போல பெயரிலோ இந்த 29 ம் எண்ணை அமையபெற்றவர்கள் ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டு வருவதன் மூலம் சிறந்த நிலை எய்தலாம் . 

மேலும் இந்த எண் காரர்கள் தடித்த வார்த்தைகளாலும் - சந்தேக மனப்பான்மையாலும் குடும்ப வாழ்வில் குதர்க்கமான குழப்பங்களாலும் - விசுவாசமில்லாத நண்பர்கள் மற்றும் உறவினர்களால் - மன நிம்மதியை இழக்கின்றனர் . புகழ் நிலையாக இருக்காது . ஆனால் நீதி மன்றங்களுக்கு சென்று கொண்டிருக்கும் வக்கீல்கள் பெயர் எண்ணில்  29 ம் - பெயரின் சூட்சும எண்ணில் 7 அல்லது 1 ம் எண்ணில் தங்களுடைய பெயர் இருந்தால் வழக்கில் வெற்றி ஏற்பட்டு கொண்டே இருக்கும் . 



" கிரீடத்தை விட்டு விலகி வருதலையும் " கிரீடத்தாலேயே இடறி கொள்வதையும் - இந்த எண்ணை பற்றி மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. இதன் பொருள் என்னவென்றால் " மகுடம் தரித்த மன்னவனிடம் தனது தகுதியை உணர்ந்து தனது பதவியை காப்பாற்றி கொள்ள மாட்டன் எனபதே ஆகும். 

மேலே சொன்ன பலன்கள் இந்த 29 ம் எண்ணிற்க்கு உண்டு என்றாலும் மிகவும் கவனமாகவும் ஜாக்கிரதையாகவும் கையாள வேண்டிய எண்ணாகும் . பிறந்த  தேதிக்கு ஏற்றாற்போல் இந்த 29 ம் எண் அமைந்து விட்டால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம் . ஒத்து வரவில்லை என்றால் குடும்ப வாழ்வு இனிமை இல்லாமல் போராட்டமாக இருக்கும் . பதவி - கௌரவம் இருந்தாலும் சோதனைகளையும் தோல்விகளையும் தரும். மனம் தவறான வழிகளில் செல்ல முற்படும் . பெண்கள் மூலம் பிரச்சனைகளை உண்டு பண்ணும். 

பிறந்த தேதி 9 - 18 - 27 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் 9 க வருபவர்களும் இந்த 29 எண்ணில் பெயர் இருந்தால் தற்கொலையும் - அகால மரணமும் உண்டாகக்கூடும் .

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அவ்வளவு அதிர்ஷ்டகரமான எண்ணாக இந்த 29 ம் எண்ணை கருதமுடியாது .

                                                 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு கிழக்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்  - ஞாயிறு 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )

இன்று 6 -  7  - 2018 -  ல் - பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 29  ம் எண்ணுக்குரிய சந்திரன் தீமையான பலனை தரக்கூடிய இடங்களில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் . 

பரிகாரம் : 1

பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இஷ்ட சித்தியாகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் சகல தோஷங்களும் நீங்கும் . 

பரிகாரம் : 3 

ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு எட்டரை மணியளவில் ஒரு சதுர கெஜம் பரப்பளவு உள்ள இடத்தை மெழுகி கோலம் இட்டு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழம் பொங்கல் அல்லது பாயசம் வைத்து சந்திர பகவானுக்கு வைத்து படைத்து பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை மக்களுக்கு விநியோகம் செய்தும் , தாமும் தமது குடும்பத்தாரும் உண்ணவேண்டும் , ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இவ்வாறு செய்து வந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் போகும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment