Tuesday, March 27, 2018

அழகான கணவன் அமையும் யோகம் யாருக்கு ? ஆன்மீக ஜோதிடர் - அதிஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் ராவணன் BSC பதில்கள்


                                                  தாயே பூமாதேவி
ஜோதிட சாஸ்திரத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடம்  என்பது  ஒரு ஜாதகிக்கு வரக்கூடிய கணவனை பற்றி அறியக்கூடிய இடமாகும். ஒரு ஆண் ஜாதகத்தில் வரக்கூடிய மனைவியை பற்றி அறிய களத்திரக்காரன் என்று சொல்ல கூடிய சுக்ரனையும் , லக்னத்துக்கு ஏழாம் இடத்தை கொண்டும் அறிய வேண்டும்.

அதே போல் ஒரு பெண் ஜாதகத்தில் கணவனை பற்றி அறிவதற்கு செவ்வாய் பகவான் காரகம் வகிக்கிறார் . பொதுவாக கணவனையோ , மனைவியையோ பற்றி அறிய லக்னத்துக்கு ஏழாம் இடத்தை கொண்டு அறியவேண்டும். 

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் வீட்டுக்கு அதிபதி   கவர்ச்சி கிரகங்கள் என்று சொல்ல கூடிய செவ்வாயின் வீடாகிய மேஷம் விருச்சிகம் சுக்ரனின் வீடாகிய ரிஷபம் துலாம் , சந்திரனின் வீடாகிய கடகம்  போன்ற வீடுகளில் இருந்தாலும் அந்த பெண்ணுக்கு வரக்கூடிய கணவன் அழகானவனாய் இருப்பான் . 


மேலே சொன்னது போல் ஏழுக்கு உடைய கிரகம்  செவ்வாயுடனோ , செவ்வாயின் வீடான மேஷம் விருச்சிகம் போன்றவற்றில் இருந்தாலும் , அவளுக்கு வரக்கூடிய கணவன் அழகானவனாக இருந்தாலும் , முன்கோபம் அதிகமாகவும் , அதிக செலாவளியாகவும் இருப்பான் . 

அதேபோல் ஏழாம் வீட்டுக்கு உடைய கிரகம்  சுக்ரனுடன் தொடர்பு பெற்று  இருந்தாலும் அல்லது சுக்ரனின் வீடுகளான ரிஷபம் துலாம் போன்றவற்றில் இருந்தாலும் அந்த பெண்ணுக்கு வரக்கூடிய கணவன் அழகாவனாகவும் , அவள் மேல் அதிக ஆசை உடையவனாய் இருப்பான். ஆனால் அதிகமாக ஆடம்பரத்தை விரும்புகிறவனாய் இருப்பான். அதாவது ஆடம்பர செலவுகள் அதிகமாக செய்வான்.


அதேபோல் ஏழுக்கு உடைய கிரகம்  சந்திரனின் வீடான  கடக ராசியில் இருந்தாலும் அல்லது சந்திரனுடன் தொடர்பு பெற்றிருந்தாலும் அவளுக்கு வரக்கூடிய கணவன் அழகானவனாய் இருந்தாலும் அவனது நடவடிக்கைகள் பல சந்தேகங்களை தூண்டும் .அதாவது மற்ற பெண்களின் தொடர்பு என்ற வகையில் என்ற விதத்தில் அவனுடைய போக்கு சந்தேகமாகவே இருக்கும். இவற்றை எல்லாம் குரு பகவான் தன்னுடைய பார்வையான ஐந்து ஏழு ஒன்பது போன்ற பார்வைகளால் பார்த்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக தன மனைவியுடன் குடும்பம் நடத்துவான். 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328






0 comments:

Post a Comment