Wednesday, January 19, 2022

நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

                                                             ஓம் சிவ சக்தி 


நிலநடுக்கத்தை முன்னறிதல் என்பது உலகம் முழுவதும் முக்கியமான தேவையாகியுள்ளது. ஏனென்றால், எப்பொழுது ஏற்படும், அதற்கான முன்னேற்பாடு, தடுப்பு நடவடிக்கை, மக்களை வெளியேற்றுவது போன்ற அடிப்படையில்,  நிலநடுக்க ஆய்வார்களால்  ஆய்வு மேற்கொண்டுதான் இருக்கிறார்கள் . 

நிலநடுக்கத்தைப் பொறுத்தவரையில் கிரகங்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட பாதையில் ஒன்றாக வரும் போதுதான் நிலநடுக்கம் ஏற்படுகிறது என்று நிரூபணம் செய்து முனைவர் பட்டமும் பெற்றார் என்.வேங்கடநாதன் என்ற ஆய்வாளர். அவர்தான் இந்தோனேஷியாவின் ஒரு அங்கமான சுமத்ரா தீவிற்கு அருகில் நடந்த பூகம்பத்தை முன்கணித்துக் கூறிய ஒரே விஞ்ஞானி. 

இந்த நிலநடுக்கம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும், அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது என்று சொல்லும் போது கிரகங்களைக் குறிப்பிடுகிறார்கள். அப்படியானால் கிரகங்களுக்கும், நிலங்களில் நடக்கக்கூடிய நிகழ்வுகளுக்கும் இருக்கக்கூடிய உறவுகளை எப்படி நாம் அறிந்துகொள்வது. எப்படி அது சாத்தியமாகும் என்பதை ஜோதிட ரீதியாக பார்க்கும் பொழுது செவ்வாய்தான் பூமிக்காரகன் என்று நாம் சொல்கிறோம். 


இந்த செவ்வாய் என்பது பூமிக்கு அதிபதியாக வருகிறார். செவ்வாயுடைய ஆற்றலுக்கு எதிர் ஆற்றலாக வரக்கூடியவர் சனி பகவான். செவ்வாய், சனி பார்வை, அதாவது செவ்வாய், சனி ஒன்று சேர்ந்தாலோ, நேருக்கு நேர் பார்த்துக் கொண்டாலோ, அதாவது சமசப்தமமாக 180 டிகிரியில் ஒன்றை ஒன்றை பார்த்துக் கொண்டாலோ அல்லது செவ்வாய், சனி ஒரே நட்சத்திரத்தில் சென்றுக் கொண்டிருந்தாலோ - ஒரே டிகிரியில் - நிலநடுக்கங்கள் நிகழ்ந்திருக்கிறது. 


இதுவரை நிகழ்ந்துள்ள நிலநடுக்கங்களையெல்லாம் நாம் ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது, செவ்வாய், சனி பார்வை, செவ்வாய், சனி சேர்க்கை இதெல்லாம் இருந்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல், செவ்வாய், சனி சேர்ந்திருந்து  ராகுவோ, கேதுவோ கூட இருந்திருந்தால் அதனுடைய பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும். 

ரிக்டர் அளவுகோலில் மிக அதிகமாக பதிவானதெல்லாம் அந்த மாதிரியான காலகட்டங்களில் இருந்திருக்கிறது.  இந்த இரண்டு கிரகங்களும் ஒன்று ஒன்று சேர்ந்து இருந்தாலும் - அல்லது ஒன்று சேர்ந்து இருந்து இவர்களுடன் ராகு - கேது தொடர்பு பெற்று காணப்பட்டு குரு பகவான் இவர்களை பார்த்து கொண்டு இருந்தால் அதிகமான அளவில் இல்லாமல் கொஞ்சம் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்படும். 


இதேபோல, நாம் பார்த்த வகையில், ஒவ்வொரு பகுதியையும் ஆராய்ச்சி செய்யலாம். உதாரணத்திற்கு இந்தியாவில் தமிழ் நாட்டில் சென்னையில் உள்ள இடமான கோடம்பாக்கம் ரிஷப ராசி - வில்லிவாக்கம் மிதுன ராசி- அதன்பிறகு மயிலாப்பூர்- பெசன்ட் நகர் - இதெல்லாம் கடக ராசி -  இப்படி அங்கிருக்கக்கூடிய நில அமைப்புகள், பயன்பாட்டில் இருக்கக் கூடிய அலுவலகங்கள், நிறுவனங்கள் இதையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு கிரகம் ஆள்கிறது என்றும், இந்த ஏரியா இந்த ராசிக்குரியது என்று ஆராய்ந்து பிரிக்க வேண்டும். 

அப்படி பிரித்துவிட்டு இந்த மாநிலத்தில் இந்த மாவட்டத்தில் இந்த நகரத்தில் நிலநடுக்கம் நடக்கும் என்று துல்லியமாகச் சொல்லலாம். இதற்காக நாம் நிறைய ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. எந்தப் பகுதியில் நடக்கும். எந்தக் காலகட்டத்தில் நடக்கும் என்று ஆய்வு செய்ய வேண்டும்.  



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328 . 

0 comments:

Post a Comment