Thursday, January 27, 2022

புத்திர ஸ்தானத்தில் ராகு - கேது இருந்தால் குழந்தை பாக்கியம் இருக்குமா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

                                                        ஓம் சிவசக்தி 

தம்பதிகளுக்கு புத்திர தோஷம் பல வகைகளில் ஏற்படுகிறது . சிலருக்கு மூதாதையார்கள் சாபத்தாலும் - சிலருக்கு தங்கள் முன்  ஜென்ம வினைப்படியும் - புத்திர தோஷம் ஏற்படுகிறது . 

புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் ராகுவோ - கேதுவோ இருந்தால் புத்திர நாசம் ஏற்படும் . இங்கு கரும் கோள் எனப்படும் ராகுவை விட செங்கோள் எனப்படும் கேதுவுக்கு தோஷம் செய்வதில் அதிக வலுவுண்டு . புத்திரர்கள்   இவர்களால் மட்டும் பழுதடைவதில்லை என்றாலும் இவர்களும் ஒரு காரணம் ஆகிறார்கள் . 

பெண்களின் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில ராகு கேது இருந்தாலும் கர்ப்ப பை சுருங்கி கரு உற்பத்தி ஆகி அதிலேயே அழிந்து விடுகிறது .

சில பெண்களுக்கு அபார்ஷன் என்று சொல்லப்படும் கரு சிதைவும் ஏழாமிட ராகு - கேதுவால் ஏற்படலாம் . சிலருக்கு இந்த ஏழாமிட ராகு கேதுவால் குழந்தை பிறந்தும் இறந்து விடுவது உண்டு .

மேலும் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில இருந்தால் ராகு கேது இருந்தால் மட்டும் புத்திர தோஷத்தை சொல்லி விட முடியாது . புத்திர காரன் குரு - புத்திர ஸ்தானத்துக்கு அதிபதியான கிரகம் இவர்கள் நல்ல நிலைமையில் இருந்து அந்த ஐந்தாம் இடத்தில ராகு - கேது - போன்ற கிரகங்கள் இருந்தால் வாரிசுகள் விஷயத்தில் ஒரு ஜாதகனுக்கு அல்லது ஒரு ஜாதகிக்கு மனதை வருத்த கூடிய நிகழ்வுகள் அவர்கள் வாழ்க்கையில் நிகழலாம் . 
 
அதாவது புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் ராகு கேது இருந்தால்  கரு சிதைவு ஏற்படும் அல்லது பிறந்தபின் சில காலத்தில் மரிக்கும் . அல்லது பிள்ளைகள் வளமாக வாழாது அல்லது பெற்றோர்கள் பேச்சை கேளாது . அல்லது பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் பகைமை உணர்வு ஏற்படும் . அல்லது பெற்றோர்களில் ஈம கடன்களை பிள்ளைகள் செய்ய மாட்டார்கள் - என்றவாறு பிரித்து ஜாதக விதிக்கு தக்கவாறு பலன்களை சொல்ல வேண்டும். இவ்வாறு ஐந்தாம் இடத்தில உள்ள ராகு கேதுவால் ஏதாவது ஒரு கெட்ட பலன்கள் நடைபெறும் .




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328 .


0 comments:

Post a Comment