Saturday, November 17, 2018

அரசாங்க உத்தியோகம் யாருக்கு கிடைக்கும் . ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                                                            ஓம் சிவ சக்தி
அரைக் காசு உத்தியோகமாக இருந்தாலும் அரண்மனையில் வேலை செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் படித்து முடித்துவிட்ட அனைவருக்கும் அரசாங்கத்தில் வேலை கிடைக்காது. ஜாதகத்தில் அரசாங்க வேலை பெறுவதற்குரிய கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே அது அமையும். அப்படிப்பட்ட ஜாதகர்கள் ஏழை வீட்டில் பிறந்திருந்தாலும் கல்வியில் உயர்ந்து அரசு வேலையை அடைவார்கள். 

ஜாதகத்தில் பத்தாம் இடம் தொழிலைக் குறிக்கும் இடம். லக்னத்துக்கு பத்தாம் இடத்துக்குரிய கிரகம் வலுப்பெற்று குரு பகவான் பார்வை பெற வேண்டும். அரசு வேலைக்குரிய கிரகம் செவ்வாய் பகவான். இந்த செவ்வாய் கிரகம் ஜாதகத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலும், லக்னம் அல்லது ராசிக்கு 3,6,9,10,11 ஆகிய இடங்களில் அமர்ந்திருந்தாலும் அந்த ஜாதகர் அரசாங்கப் பதவியை அடைவார்.

அரசாங்கத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவிகளை வகிப்பவர்களின் ஜாதகத்தில் குரு பகவானும் செவ்வாய் பகவானும் வலுவாக இருப்பார்கள். மேற்கண்டவாறு ஜாதகம் அமையப் பெற்ற விவரத்தை நல்ல ஜோதிடரிம் காட்டி அறிந்து கொள்ளலாம். கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தைச் செய்து வந்தால், அரசுப் பணி தடையின்றிக் கிடைக்கும். இப்படிப்பட்ட ஜாதகம் அமையப் பெறாதவர்களுக்கு அரசுப் பணி கிடைப்பது அரிதாகும்.
lord murugan க்கான பட முடிவு


                                                                                பரிகாரம்:

1. நல்ல முறையில் ஜாதகம் அமையப் பெற்ற குழந்தைகள் கல்வி பயிலத் தொடங்கும் காலம் முதல் திங்கட்கிழமைதோறும் முருகனுக்கு விரதம் இருந்து வந்தால் கல்வியில் உயர்ந்து வரலாம். படித்து முடித்தவுடன் அரசுப் பணி கிடைக்கும்.

2. நல்ல முறையில் ஜாதகம் அமையப் பெற்று, சனி பகவான் பதவியைக் கொடுப்பவராக இருந்தால் சிறைத் துறை, தண்டனை தருதல் போன்ற பதவிகளுக்கு உரியவர்கள் இப்படிப்பட்டவர்கள் கல்வி பயிலும் காலம் தொட்டு சனிக்கிழமைதோறும் விரதமிருந்து வந்தால் கல்வியில் உயர்ந்து வரலாம். படித்து முடித்தவுடன் அரசுப் பணி கிடைக்கும்.

lord krishna க்கான பட முடிவு

3. நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் போது, ஓம் நமோ நாராயணாய நமக என்று 108 முறை சொல்லிக் கொண்டே போனால், நேர்முகத் தேர்வில் கேட்கும் கேள்விகளுக்கு கிருஷ்ணபகவான் துணைக்கு வந்து, அறிவுப்பூர்வமான பதில்களைச் சொல்ல வைப்பார். வெற்றி எளிதில் வரும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.


0 comments:

Post a Comment