Friday, May 6, 2022

மனைவியின் இறப்பு எந்த வகையில் இருக்கும் என்பதை ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ளலாமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

  

 
ஒரு சாதகனின் ஜெனன ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடம் என்பது மனைவியை பற்றி அறியக்கூடிய இடமாகும் அதே போல் மனைவியின் ஆயுளை பற்றி அறியக்கூடிய இடம்  லக்னத்துக்கு இரண்டாம் இடமாகும் .

இந்த இரண்டாம் இடத்தை கொண்டு மனைவின் இறப்பு எந்த வகையில் அமையும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். லக்னத்துக்கு இரண்டாம் இடத்தில சூரியன் இருந்தால் மனைவியானவள் விஷம் சாப்பிட்டு இறக்கும் சூழ் நிலை உருவாகும் .

தேய்பிறை சந்திரன் இருந்தால் மனைவிக்கு நீரினால் கண்டம் ஏற்படும். அதாவது நீரோடு தொடர்புடைய ஏதாவது ஒரு அமைப்பினால் அவளுக்கு மரணம் ஏற்படும். 

இந்த இடத்தில செவ்வாய் இருந்தால் நெருப்பினால் கண்டம் ஏற்படும் இந்த இரண்டாம் இடத்தில புதன் பாவிகளோடு இருந்தால் மனைவி உண்ண உணவில்லாமல் பசியை பொறுத்துக்கொண்டு தன்னையே வருத்தி கொள்வாள். 

இதனால் அவளுக்கு அல்சர் சம்பந்தமாக ஏற்படும் பிரச்சனை அல்லது வயிறு சம்பந்தமான பிரச்சனை அவளுக்கு  மரண பயத்தை கொடுக்கும். 

இரண்டாம் இடத்தில குரு பகவான் இருந்தால் தன்னுடைய கணவன் சாப்பிட்ட பாத்திரத்தில் சாப்பிட அது ஒரு அருவருப்பான செயல் என கருதி அதில் சாப்பிடமாட்டாள். 

இந்த இரண்டாம் இடம் சுக்கிரனுடைய நட்பு ராசியாக இருந்து அதில் சுக்ரன் பாவிகளுடன் இருந்தால் அவள் விஷம் சாப்பிடுவாள் . சனி ஆட்சி பெற்று இரண்டில் இருக்க அந்த இரண்டாம் வீடு சனியின் வீடான மகரம் கும்பமாக இருந்தால் அந்த ஜாதகனுக்கு வாய்க்க கூடிய மனைவி தீராத நோயாளியாகவே இருப்பாள். 

இந்த இரண்டாம் இடத்தில ராகுவோ கேதுவோ பெற்றிருக்கும் ஒரு சாதகனின் மனைவி தன் கணவன் மீது இருக்கும் பாசத்தினால் தன்னுடைய உயிரையே தியாகம் செய்வாள் . 

மேலும் இந்த இரண்டாம் இடத்திலோ அல்லது இரண்டாம் இடது அதிபதி போன்றவர்களுக்கோ சுப கிரகங்களின் பார்வை ஏற்பட்டிருந்தாலோ அல்லது இரண்டாம் இடது அதிபதி சிறப்பான ஸ்தானத்தில் அமைந்திருந்தாலோ மேலே சொன்ன தோஷங்கள் விலகி மனைவியானவள் நீண்ட ஆயுளை பெற்று வாழ்வாள் .  





உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment