Wednesday, October 5, 2022

ஜோதிட சாஸ்திரத்தில் இல்லற வாழ்க்கை இனிமையாக சந்தோஷமாக அமைவதற்கான கிரக அமைப்புகள் சொல்லப்பட்டிருந்தாலும் அதற்க்கு மாறாக இல்லற வாழ்க்கை சிறக்காமல் போவதற்கான ஒரு சில சிலர் அமைப்புகளும்  பெயரின் கூட்டு எண்களும் உள்ளன. 

அத்தகைய வரிசையில்  பெயர் அமைப்புகள் என்று பார்க்கும்பொழுது மனோரமா, மனோரஞ்சிதம், மனோகரி போன்ற பெயர் அமைப்புகள் இல்லற வாழ்க்கையில்  பலபிரச்சனைகளை சந்திக்க வேண்டிய பெயர் அமைப்புகளாகும். 

இந்த பெயர் அமைப்புகளை  உற்று நோக்கும்பொழுது , MAN NO  என்று வருகிறது. இதற்க்கு பொருள் மனிதன் இல்லை, அதாவது மனிதன் என்பது ஆண்பாலை குறிக்கிறது. இல்லை என்பது நன்மைக்கு மாறான எதிர் சொல்லை குறிக்கிறது. இதனை நாம் இப்படியாக பொருள் சொல்ல வேண்டும். 

ஒரு பெண் திருமணத்திற்கு  பிறகு கணவனே கண் கண்ட தெய்வம் என்பதற்கு இணங்க திருமணமான ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கணவனே அவளின் அனைத்து தேவைகளுக்கும் முக்கிய மூல காரணமாகிறான்.. 

அந்த விதத்தில் பார்க்கும்பொழுது , ஒரு பெண்ணின் பெயரில் MAN என்ற ஆண்பாலை குறிக்கும் ஒரு சொல்லில் கணவனும் சம்பந்தப்படுகிறான். 

அந்த பெண்ணின் பெயரில் MAN என்ற சொல்லோடு NO என்ற நன்மைக்கு எதிர்மாறான சொல் வரும்பொழுது அந்த பெண்ணின் வாழ்க்கையில் கணவனால் எந்த வித சந்தோஷத்தையோ, கணவனால் வாழ்க்கையில் எந்தவித லாபத்தையோ வாழ்க்கையில் எதிர்பார்க்கமுடியாத சூழ் நிலையும் உருவாகும் 

கணவனை இழந்து வாழும்  ஒரு சூழ்நிலையும் கணவனை  விட்டு பிரிந்து வாழும், சூழ்நிலையும் இந்த சொல்லின் உச்சரிப்புகள் உருவாக்கிவிடும். 


சுருக்கமாக சொன்னால் கணவன் இருந்தாலும் அவரால் வாழ்க்கையில் எந்த வித பலனையும் காணமுடியாது. 

ஆண்பாலை குறிக்கும் எந்த ஒரு ஆண் வர்க்கத்தாலும் வாழ்க்கையில் எந்த வித பலனையும் இவர்களால் அடையமுடியாது. 

தன்னுடைய சொந்தகாலில் நின்று உழைத்து முன்னேறி வாழ்க்கையை ஒட்டவேண்டிய சூழ் நிலை வரும். . ஆதலால் எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த அபசகுனமான பொருளை தரக்கூடிய பெயர் உச்சரிப்புகளை உடைய பெயர் அமைப்புகளை சூட்ட  வேண்டாம். 

மேலே சொன்ன பெயர் உதாரண பெயர்கள் கணவரை  இளமையில் பிரிந்து வாழ்ந்து  பெயர் அமைப்புகள் என்றாலும் . 

ஒரு பெண்ணின் பெயரின் மொத்த கூட்டு எண்களும். இளமையில் இல்லற வாழ்க்கை சிறக்காமல் போவதை செய்து விடுகின்றன . 

ஒரு பெண் திருமணத்திற்கு  முன்பு தன்னுடைய தகப்பன் இனிஷியலையே போட்டு தன்னுடைய பெயரை எழுதுவாள். 

திருமண ஆன பின்பு கணவனுடைய இனிஷியலை போட்டு தன்னுடைய பெயரை எழுதும் ஒரு கட்டாயம் வரும்பொழுது  கணவனுடைய இனிஷியலை போட்டு பெயரை எழுதும் பெயரின் கூட்டு எண்ணிக்கைக்கான பலனே அப்பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளை தீர்மானிக்கிறது. 

எந்த ஒரு பெண்ணுக்கும்  தகப்பனுடைய இனிஷியல் இல்லாமல் பெயரின் கூட்டு எண் 6  வந்தால் 

உதாரண பெயர் AMAI என்பதை ஒரு பெண்ணின் பெயராக எடுத்துக்கொண்டால் நியூமராலஜி படி இந்த எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை 6

இந்த பெண்கள் A I J Y X  - போன்ற ஆரம்ப எழுத்துக்களையுடைய ஆண்களை மணக்க வேண்டாம் . 

காரணம் இவர்கள் திருமணத்திற்கு பிறகு கணவனுடைய இண்டிஷியலை சேர்த்து தன்னுடைய பெயரை எழுதும்பொழுது கேதுவின் ஆதிக்க எண்களில் அதாவது 7 ம் எண்ணில் பெயர் அமைந்து திருமண வாழக்கையை சிறக்க விடாமல் செய்துவிடும் . 

அடுத்து ஒரு பெண்ணின் பெயரில் தகப்பனின் இனிஷியல் இல்லாமல் பெயர் எழுத்துக்களின் மொத்த கூட்டு எண்ணிக்கை 3 க வந்தால் 

உதாரண பெயர் ASIHR என்பதை ஒரு பெண்ணின் பெயராக எடுத்துக்கொண்டால் நியூமராலஜி படி இந்த எழுத்துக்களின் மொத்த கூட்டு எண்ணிக்கை 12 = 1 + 2 =  3 

இந்த பெண்கள் D M T போன்ற ஆரம்ப எழுத்தை உடைய ஆண்களை மணக்க வேண்டாம் . காரணம் இந்த பெண்கள் திருமணத்திற்கு பிறகு கணவனின் இனிஷியலை போட்டு தன்னுடைய பெயரை எழுதும் கட்டாயம் வரும்பொழுது அந்த பெயர் கேதுவின் ஆதிக்க எண்ணான 7 ம் எண் ஆதிக்கத்தில் அமைந்து இல்லற வாழ்க்கையை சிறக்க விடாமல் செய்து விடும் . 

அதேபோல் கணவரின் ஆரம்ப எழுத்து  எந்த எழுத்தில் ஆரம்பித்தாலும்  கணவனுடைய இனிஷியலை போட்டு பெயரை எழுதும் பொழுது பெயரின் மொத்த கூட்டு எண் 18 , வராமல் இருப்பதும் நல்லது.

T. JERKLR  கணவனின் இனிஷியலோடு சேர்ந்த  ஒரு பெண்ணின் பெயராக இதை எடுத்துக்கொள்வோம் எடுத்துக்கொள்வோம் . 

நியூமராலஜி படி இந்த எழுத்துக்களின் மொத்த கூட்டு தொகை 18 . 

இந்த பதினெட்டு என்ற எண் சில மோசமான பலன்களை தரக்கூடியது , 1  ம் எண்ணான சூரியனும் 8 எண்ணான சனிபகவானும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள் 

இந்த இரண்டும் ஒன்றுக்கு ஒன்று பகையான கிரகங்கள் வாழ்வில் மோசமான பலன்களை தரும் 

பாரத போர் 18 நாட்கள் நடைபெற்றது என்பதும் 

இந்தியாவின் தீவிரவாத செயல்கள் அடிக்கடி நடைபெறும் இடமும் ரத்த பூமியான  காஷ்மீர் KASHMIR இந்த பெயரின் கூட்டு எண் 18 . 

கலவர பூமியாகி பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை  காலம் காலமாக பறித்த ஸ்ரீலங்கா   SRILANKA இந்த பெயரின் கூட்டு எண் 18 

ரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டு இறந்த கிறிஸ்தவர்களின் புனித கடவுளான   கிறிஸ்து CHRIST  இந்த பெயரின் கூட்டு எண் 18 .  

மேலே சொன்ன பெயர்கள் அனைத்தும் இந்த 18 ம் எண் ஆதிக்கத்திற்கு உட்பட்டவையாகும் 

இந்த அனைத்து பெயர்களிலும் கலவரம் ரத்தம், நிம்மதி இல்லாமை,சோகம் போன்ற  செயல்களை உடைய நிகழ்வுகள் சம்பந்தப்பட்டிருப்பதால் , இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களின் வாழ்க்கையின் நிகழ்வுகளும் போராட்ட மயமாக அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அதே போல் எண் 29 பெயரின் மொத்த  கூட்டு எண்ணாக வரவே கூடாது. 

ஜோதிட சாஸ்திரத்தில் 2 ம் எண்ணான சந்திரன் வீட்டில் ஒன்பதாம் எண்ணான செவ்வாய் நீச்சமடைவதும்  

9 ம்  எண்ணான செவ்வாய் வீட்டில் 2 ம்  எண்ணான சந்திரன் நீச்சமடைந்து எவ்வித பலனை கொடுக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.  

மனத்தை ஆட்சி செய்யும் 2 ம் எண்ணான சந்திரனோடு  9 ம்  எண்ணான செவ்வாய் சேர்ந்து 29 என்று வரும்பொழுது மனதில் கொடூரமான எண்ணங்கள் தோன்றி , விபரீதமான செயல்களை செய்யத்தூண்டி வாழ்வில் விபரீதமான பலன்களை தரும் .  

எனவே மேலே கண்ட பெயர் அமைப்புகளை கொண்ட  பெண்களும்  மேலே சொன்ன பெயரின் கூட்டு எண்களை பெயரில் பெற்ற  பெண்களும்   கணவரை இழத்தல், கணவரை விட்டு பிரிந்து வாழ்தல், அல்லது மிகவும் சகிக்க முடியாத சூழ்நிலையில் கணவனோடு வாழ்க்கையை ஓட்டுதல் போன்ற சூழ் நிலைக்கு ஆளாக வாய்ப்புகள் அதிகம் . 

மேலே சொன்ன  சோகத்தை ஏற்படுத்தும் துரதிர்ஷ்டமான எண்கள் இவைகள் உதாரண பெயர்கள் இவைகள் ஒரு சிறு உதாரணம் மட்டுமே . இவைகளை சொல்லி கொண்டு போனால் நூற்று கணக்கான உதாரண பெயர்களை சொல்லலாம் . 

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் விதிப்பலன் இருந்தால் மட்டுமே எந்த ஒரு நல்ல விஷயத்தையும் நாடி அதன் மூலம் நல்ல பலன்களை அடையமுடியும் . 

எனவே அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்தும்.தீமை தரக்கூடிய எண்கள் பெயரின் கூட்டு எண்களாக அமையாமல்  நன்மை தரக்கூடிய, எண்களை . பெயரின் கூட்டு எண்களாக அமைத்து வாழ்க்கையில் நல்ல  பயன்களை அடைய வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன். 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment