Monday, June 24, 2019

குலதெய்வத்தை வணங்கும்பொழுது விளக்கு ஏற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுங்கள் ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர்.இராவணன் BSC


                                          பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 

குடும்பத்திற்கு நல்லாசி கிடைக்க வேண்டுமானால் - எந்த ஒரு தெய்வத்தின் அருளை பெற வேண்டுமானாலும் முதலில் குலதெய்வத்தின் அருளை பெறுவது அவசியம். இவ்வளவு சக்தி வாய்ந்த குலதெய்வத்திற்கு எந்த விளக்கு ஏற்றி வழிபடுவதால் பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம். 

ஆரம்பிக்கும் ஒவ்வொரு செயலிலும் எந்த ஒரு நல்ல காரியத்திற்க்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து முடித்துவிட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும். நீங்கள்  கேட்டது அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதில் உங்கள் குலதெய்வத்தை தவிர வேறு எந்த தெய்வமும் நிறைவேற்றாது.
 
எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறவும் வாழ்க்கையில் எல்லாமே நல்லபடியாக நடக்கவேண்டும் தடைகள் நீங்கவேண்டும் என்று நினைத்தால், நாம் குலதெய்வத்திற்கு மாவிளக்கு ஏற்றுவது சகலவித நன்மைகளை பெற்றுத் தரும்.

கடவுளை வணங்க பெரும்பாலும் வீட்டில் விளக்கு ஏற்றும்போது, பித்தளை, வெள்ளி, மண் விளக்குகளை ஏற்றி வழிப்படுவோம். ஆனால் குலதெய்வத்திற்கு  கண்டிப்பாக மாவிளக்குதான் ஏற்றவேண்டும்.
 
குலதெய்வத்திற்கு மாவிளக்கு தயாரிக்க பச்சரிசியை ஊறவைத்து இடித்து அல்லது அரைத்த பின் சலித்து, இதனுடன் வெல்லம் பாகு எடுத்து அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்தும் பிசைந்து மாவிளக்கு செய்யலாம். இதனுடன் சிறிது நெய் சேர்த்துக்கொள்வது நல்லது.
 
இந்த விளக்கை மாதம் வரும் பெளர்ணமி நாள்களில், இல்லை என்றால் வருடத்துக்கு ஒரு முறையாவது குலதெய்வத்திற்கு வாழை இலையில் மாவிளக்கு ஏற்றி, படையலுடன் வழிபடுவது சிறப்பானது. இவற்றை இரட்டையாக தீபம் போடுவது நல்ல பலன்களை பெற்றுத்  தரும். அதிலும் பசு நெய் போட்டு ஏற்றுவது உத்தமம்.
 
குடும்பத்தில் எந்த பிரச்சனைகள் இருந்தாலும் -வீட்டில் கணவன்-மனைவி இடையே சண்டை சச்சரவு அதிகம் இருந்தாலும் உடனே தீர்வு உண்டாகும், குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பேர் புகழுடன் செல்வம் உண்டாக்கும் எனவும் கூறப்படுகிறது. உங்களுக்கு தீராத பிரச்சினைகள் இருந்தால் அதை  தீர்த்துவைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment