Wednesday, October 19, 2022

செவ்வாய் தோஷம் உங்களுக்கு இருக்கிறதா ? இந்த பரிகாரத்தை செய்யுங்கள் ? செவ்வாய் தோஷம் உங்களுக்கு பாதிப்பை தராது ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

 


செவ்வாய் தோஷம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால், செவ்வாய் கிரகத்தின் தாக்கங்கள் ஒன்றுமில்லாமல் போய் விடும்.
கும்ப விவாகம் என்ற ஒரு வகையான திருமணம் இந்த தோஷத்தின் தாக்கங்களை குறைக்க உதவிடும். இந்த வகை திருமணத்தில், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஒரு மரத்தையோ அல்லது தாழியையோ திருமணம் செய்ய வேண்டும். இது செவ்வாய் தோஷத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடும்.

செவ்வாய்க்கிழமைகளில் பூஜைகள் புரிவதும், ஆஞ்சநேயர் கோவில்களுக்கு செல்வதும் கூட இந்த தோஷத்தை போக்குவதற்கான சிறந்த வழியாகும்.
 
செவ்வாய் தோஷக்காரர்கள் இரத்தினக்கல் பதித்த தங்க மோதிரத்தை தங்கள் வலது கரத்தில் உள்ள மோதிர விரலில் அணியலாம்.
 
இந்த தோஷத்தின் தாக்கம் 28 வயதுக்கு பிறகு குறையும் என்பதால், அதற்கு பிறகு திருமணம் செய்யவே அறிவுறுத்தப்படுகிறது.
 
செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக மந்திரம் மற்றும் ஆஞ்சநேயர் மந்திரங்களை பாடினால், செவ்வாய் தோஷக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கும். இவ்வாறு செய்வதால் செவ்வாய் தோஷத்தின் தாக்கம் குறையும்.







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Saturday, October 8, 2022

கண்டத்திலிருந்து தப்ப முடியுமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC

0 comments

 

ஒரு நபர் நம்மிடம் ஜாதகம் பார்க்க வரும்போதே சிலரிடம் சில காலகட்டம் வரை உங்களின் மகனை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம். 

சமீபத்தில் ஒருவர் வந்திருந்தார். அவருடைய மகனை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்ப வேண்டாம், நீங்களே கூட்டிக்கொண்டு போய் விடுங்கள், இல்லையென்றால், பள்ளிப் பேருந்து, வேனில் அனுப்பி வையுங்கள் என்று சொன்னேன். 

ஏனென்றால், பெற்றோர்களுடைய கிரக அமைப்பை ஆராய்ந்து அவர்களுக்கு ஆலோசனையை கொடுத்துவிடுகிறோம்.   

வீட்டு விசேஷம், கல்யாணம் போன்றவற்றிற்கு செல்லும்போது, குழந்தைகளுடன் இங்கேயே இருக்கட்டும் என்று சொன்னால் விட்டுவிட்டு வரவேண்டாம் என்றெல்லாம் கூட சொல்லி அனுப்புகிறோம். 

கண்டம் இருக்கிறது பையனுக்கு, அதற்காக பயப்படவேண்டாம். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை சொல்கிறேன். 

அதை கவனமாக கடைபிடியுங்கள் என்று சொல்லிவிடுவேன். எந்த விசேஷத்திற்குப் போனாலும், உங்களுடனேயே அழைத்துச் செல்லுங்கள், உங்களுடைய அழைத்து வந்துவிடுங்கள் என்று சொல்லி அனுப்புகிறோம்.

ஒரு முக்கியமான விஷயம் ஊழ்வினை என்று பார்க்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில பிள்ளைகளுக்கெல்லாம் ஆயுளே குறைவு என்றெல்லாம் தெரியும். குறை ஆயுள்தான், ஆயுள்காரகன் சனி சரியாக இல்லை, 8ஆம் அதிபதி ஆயுள் ஸ்தான அதிபதி சரியில்லை என்றால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

குறிப்பாக பார்க்கும் போது, நீரால் கண்டம், நெருப்பால் கண்டம், மருந்தால் கண்டம் என்று தனித்தனியாக உண்டு. சங்க காலத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. சுக்ர நாடி, நந்தி வாக்கியம், ஜாதக அலங்காரம் , கேரள மணிகண்ட ஜோதிடம் போன்ற நூல்களிலெல்லாம் எந்தெந்த கிரக அமைப்புகள் இருந்தால் ஆயுள் கெடுதல் உண்டாகும் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது.

அதுபோல, அந்தப் பெண் குழந்தையின் ஜாதகத்திலும் நீரால் கண்டம் என்பதெல்லாம் இருந்திருக்கும். அதிலும், எந்த மண்ணில் எங்கு போய் இறப்பு வரும் என்றெல்லாம் கூட சொல்லப்பட்டிருக்கிறது. 

அந்நிய தேசத்திற்கு சென்று இறப்பு ஏற்படும், பயணத்தின் போது மரணம், உண்ணும் போது மரணம், உறக்கத்தின் போது மரணம் என்றெல்லாம் கூட சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும் லக்னாபதி, 8 க்குரியவன், 6 க்குரியவன் அந்த கிரக அமைப்புகளை வைத்தும் ஜாதகத்தை அலசிப் பார்க்கலாம். 

உதாரணத்துக்கு ஒரு பையனுக்கு கிரக அமைப்பு சரி இல்லை . 

அவன் தினமும் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு செல்கிறான் 

அதன் மூலம் அவனுக்கு ஆபத்து இருக்கிறது என்று அவனின் ஜாதக அமைப்பு சொன்னால் உங்கள் மகனை கல்லூரிக்கு இரு சக்கர வாகனத்தில் அனுப்பாமல் நீங்களே கொண்டு பொய் விடுங்கள் என்று பெற்றோர்க்கு அறிவுரை சொல்கிறோம் . 

அப்படி சொல்வதற்கு காரணம் பெற்றோர்களின் ஜாதக நல்ல கிரக அமைப்புகள்  அவர் அருகில் இருக்கும் வரை அவரின் மகனை பாதிக்காது . 

ஒரு ஜாதகருக்கு நிகழ் கால கிரக அமைப்புகள் மோசமானதாக இருந்தால் அவரின் நெருங்கின சொந்தங்களின் ஜாதகங்களில் கிரக அமைப்புகள் நன்றாக இருந்தால் சிறிது காலம் வரை அவரின் அரவணைப்பில் இருப்பது நலம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Friday, October 7, 2022

இன்று அக்டோபர் 8 - 2022 - சனிக்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு பிற்காலத்தில் அதிகார பதவிகள் மூலம் பொன்னும் பொருளும் சேரும் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments


இன்று 8 - 10 - 2022 - சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின்  எண் சனி சுக்ரன் கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்துள்ளது . இந்த இரண்டு கிரங்களும் இணைந்து புதனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது 

8 6                =   ஹீப்ரு பிரமிடு எண் 
2 6 9
4 7 8 1
1 3 4 4 6
9 1 2 2 2 4
8 1 0 2 0 2 2  = இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி 

புதனின் ஆதிக்கத்தை உணர்த்தும் அதிர்ஷ்ட  எண் வரிசையில் இன்று பிறந்த குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டமானவர்கள் . 

சனியின் ஆதிக்க எண்ணும் சுக்கிரனின் ஆதிக்க எண்ணும் இணைந்து புதனின் ஆதிக்க குணங்கள் இன்று பிறந்த குழந்தைகளுக்கு  பிரதிபலிப்பதால்  

இந்த அதிஷ்டம் மிக்க எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு மிக பெரிய அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு மூலமாக பொன்னும் பொருளும்  உதவியும் வந்து சேரும் . 

ஆபத்து காலங்களில் தோள்  கொடுக்கும் சிநேகிதர்களின் உதவியால் சந்தோஷமான வாழ்வும் மகிழ்சிகரமான சூழ்நிலைகளும் உண்டாகும். 

பொன் பொருள் யோகத்தோடு சேர்ந்து வீடு வண்டி வாகன சுகங்களும் இவர்களை தேடி வந்து மகிழ்சி கடலில் ஆழ்த்தும்

நினைத்தது நிறைவேறும் பாக்கியங்களும் இந்த எண்ணிற்கு உண்டு. 

இந்த எண்ணில் பெயர் அமைய  ஆண் பெண் சுகம் அடையும்   சிறப்பான அமசங்களும் உண்டு. 

பிறந்த தேதி - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயர் அமைத்து குழந்தைக்கு சூட்டுவதன் மூலம் அதிர்ஷ்டத்தை விருத்தி அடைய செய்யலாம் . 

                                                 அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்   86 ம் எண்ணுக்குரிய புதன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் .  

பரிகாரம் : 1

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் . 


                                  இன்று அக்டோபர் 8 ல் பிறந்தவர்கள் "


இந்திய தெலுங்கு மொழி திரைப்பட நடிகை - பிறப்பு - 8 - 10 - 1977 


மில்கா சிங் - இந்திய தடகள விளையாட்டு வீரர் -  காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தனி நபர் தடகள போட்டியில் தங்கம் வென்ற சுதந்திர இந்தியாவின் முதல் நபர் . பிறப்பு 8 - 10 - 1929 


மேட் டாமன்  - அமெரிக்க நடிகர் - எழுத்தாளர் - பிறப்பு - 8 - 10 - 1970







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



ஜாதகப்படி என்ன படிப்பு படிக்கலாம் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC

0 comments

 

ஜாதகத்தில் கல்வி ஸ்தானங்கள் என்று பார்த்தால் முதலில் வித்தியாகாரகன் புதன் மிக்க பலத்துடன் இருப்பது அவசியம். இந்த புதன் அருள் இருந்தால்தான் புத்திக்கூர்மை, சமயோசித புக்தி, நினைவாற்றல், தர்க்கவாதம், வாக்குவன்மை, கணிதத்தில் நிபுணத்துவம், ஜோதிட சாஸ்திர புலமை, வானவெளி ஆராய்ச்சி, பத்திரிகைத்துறை, எழுத்தாளர், பேச்சாளர், விரிவுரையாளர், கம்ப்யூட்டர் ஞானம் என எண்ணிலடங்கா வித்தைகளில் நாம் ஜொலிக்க முடியும். இந்த புதன் ராசிக்கட்டம், நவாம்சக் கட்டம் இரண்டிலும் பலத்துடன் இருப்பது அவசியம். புதன் நீசம் அடையாமலும், 6, 8, 12 ஆகிய இடங்களில் மறையாமல் இருப்பதும் நல்லது. சில ஜாதகங்களில் புதன் நிலை சற்று குறைந்தாலும், மறைந்தாலும் வேறு சில அமைப்பினால் உயர்கல்வி யோகம் வரும். 

இன்னொரு கோணத்தில், ‘மறைந்த புதன் நிறைந்த செல்வம்’ என்று சொல்வார்கள். ஆகையால் எல்லா அம்சங்களையும் சீர்தூக்கி பார்ப்பதே சிறந்தது. புதன் முக்கியம், அதற்கு அடுத்து லக்னம், லக்னாதிபதி பலம் முக்கியம். உயர்நிலைக் கல்விவரை நான்காம் இடம், சிந்தனை, யோகத்தை தரக்கூடிய ஐந்தாம் இடம், மேல்படிப்பு, ஆராய்ச்சித்துறை ஒன்பதாம் இடம், பேச்சு, வாக்கு செயல்திறனைக் குறிக்கும் இரண்டாம் இடம் என பல பிரிவுகள் உள்ளன. சுருக்கமாக 1, 2, 4, 5, 9 ஆகிய வீடுகள், அவற்றின் அதிபதிகள் பலம் பெறுவது முதல்தர கல்வி யோகமாகும். மேலும் சில கிரக சேர்க்கைகள், பார்வைகள் மூலம் சில குறிப்பிட்ட படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற முடியும்.  


ஒருவர் ஒரு துறையில் மிக உயர்வான நிலைக்கு வருகிறார் என்றால் ஜாதக பலம், கிரக சகாயம், தசா புக்தி காலம், பூர்வ புண்ணியம், புகழ் அனுபவிக்கும் பாக்கியம் அத்துடன் மிக முக்கியமாக நமக்கு பூர்வ ஜென்ம கர்மா இருக்க வேண்டும். எல்லோரும், எல்லா கல்வி படித்தாலும் அந்த குறிப்பிட்ட கல்வியில், தொழில், வியாபாரத்தில் தனத்தையும், செல்வாக்கு, பிரபலத்தையும் குறிப்பிட்ட சிலரே அடைகிறார்கள். உதாரணத்திற்கு லக்னம், இரண்டாம் இடம், பத்தாம் இடம் தொடர்பு ஏற்பட்ட ஜாதகங்கள் பெரும்பாலும் பேச்சுத் திறமையால் தொழில் செய்யும் துறையில் கால் பதிக்கிறார்கள். இந்தப் பேச்சுத் திறனை மட்டும் மூலதனமாக வைத்து செய்யும் தொழில்கள் நிறைய உண்டு. யார் யாருக்கு என்ன விதிக்கப்பட்டுள்ளதோ அந்த படிப்பு சார்ந்த துறையில் வாழ்வாதாரம் அமையும்.

                                           மருத்துவராகத் திகழ்வதற்கு

இன்றைக்கு மருத்துவராக, மருத்துவ சம்பந்தப்பட்ட துறையில் சேர்ந்து படிப்பதற்கு மிகப்பெரிய யோக அமைப்பு வேண்டும். இந்த படிப்பில் அடிப்படை மருத்துவ கல்வி பயில M.B.B.S. படிப்பில் தேர்ச்சி அடைய வேண்டும். இதற்கு பிறகு நமது உடலில் உள்ள பாகங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக சிறப்பு படிப்புகள் உள்ளன. D.Pharm, B.Pharm, M.Pharm. ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் என்று இது சம்பந்தமான நுண்ணறிவு படிப்புகள் நிறைய உள்ளன. ஒரு மருத்துவர் ஆக, ஜாதகத்தில் மிக முக்கிய அம்சமாக ராகு/கேது ஆகிய இரு சாயா கிரகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. கேதுவை மருத்துவ கிரகம் என்று சாஸ்திரம் சொல்கிறது. ராகு மறைந்து இருக்கின்ற பொருள்,  உள் விஷயங்கள் மற்றும் விஷத்தை குறிக்கின்ற கிரகம்.


மருந்து, மாத்திரைகள், விஷம் சம்பந்தப்பட்டவைதான். ஒரு ரசாயனம் மருந்து மற்றொரு ரசாயனத்துடன் சேரும்போது அது நோய் தீர்க்கும் மருந்தாகிறது. நாம் சாப்பிடுகிற ஒவ்வொரு மருந்தும் விஷத்தமையுடையதுதான். அதனால்தான் அந்த மருந்து அளவு மீறிப்போகும்போது வேறு விதமான உப, துணை நோய்களை ஏற்படுத்துகிறது. ஆகையால்தான் நிழல் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகுகேது மருத்துவத்திற்கும், ரசாயனத்திற்கும், வேதிப்பொருள்களுக்கும் உரிமை உடையவர்களாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ராகுகேதுவுடன் மற்ற கிரகங்கள் 4, 5, 9, 10ம் பாவங்கள். பாவாதிபதிகள் சம்பந்தம் பெறும்போது மருத்துவத்துறையில் நுழையும் யோகம் உண்டாகிறது. பல கிரகங்கள் தொடர்பு கொள்ளும்போதுதான் மருத்துவ அமைப்பு ஏற்படுகிறது.

சந்திரன் பலமாக இருந்தால் மனநல மருத்துவர்களாக வருவார்கள். சூரியன், சுக்கிரன் இரண்டாம் வீட்டோடு தொடர்பு கொள்ளும்போது கண், பல் மற்றும் ENT மருத்துவராக முடியும். செவ்வாய் பலமாக இருந்தால் தன் கைதேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணராக முடியும். நரம்பியல் துறைக்கு புதன் அருள் தேவை. கேஸ்ட்ரோ என்ற வயிறு சம்பந்தமான படிப்பிற்கு குரு பலம் தேவை. எலும்பு சம்பந்தமான துறைக்கு சனியின் பலம் தேவை.

                                                       இன்ஜினியர் பொறியாளர்


சிவில் இன்ஜினியர் கட்டிடம் கட்டுதல் போன்றவற்றிற்கு செவ்வாய், புதன், சனி ஆகியோர் 9, 10ம் வீட்டோடு தொடர்பு இருக்க வேண்டும். சூரியன், புதன் சேர்க்கை புகழ் தரும். கம்ப்யூட்டரில் தேர்ச்சி அடையலாம். சனி, செவ்வாய் சம்பந்தம்  மெக்கானிக்கல் துறை. புதன், செவ்வாய்,
சுக்கிரன் சம்பந்தம்  கட்டிடத்துறை, ஆர்க்கிடெக்ட், வரைபட நிபுணர், உள் அலங்கார நிபுணர்.
                                                            கலைத்துறை


சினிமா, இயல், இசை, நாடகம், கேமரா, எடிட்டிங், கதை, கவிஞர், டைரக்‌ஷன் போன்றவற்றில் கால் பதிக்க சுக்கிரன் பலம் மிக முக்கியம், இரண்டாம் இடம். புதன் பலமாக இருந்தால் வசனகர்த்தா, எழுத்தாளர். கேதுவின் அருள் இருந்தால் இசைத்துறையில் நுழையலாம். ராகு+புதன்  கேமரா, எடிட்டிங் போன்றவை. சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் இருந்தால் வித்யா யோகம். வித்தை, கல்வி, புகழ் கிடைக்கும்.

                                                                       சட்டப்படிப்பு


லக்னம், ராசி இரண்டும் பலமாக இருப்பது அவசியம். இரண்டாம் இடம், இரண்டாம் அதிபதி செவ்வாய் இந்த மூன்றும் முக்கிய அம்சமாகும். குரு ஆட்சி, உச்சம், கேந்திர, கோணங்களில் இருப்பது சிறப்பு. புதன், குரு பார்வை, சம்பந்தம். வாதப்பிரதிவாதம், குறுக்கு விசாரணை போன்றவற்றில் நிபுணத்துவம் ஏற்படும். குரு சட்டம் சார்ந்த அறிவு, செவ்வாய் தர்க்கவாதம், புதன் பேச்சு சாமர்த்தியம்.

                                                         ஆசிரியர்  விரிவுரையாளர்

இரண்டாம் இடம், இரண்டாம் அதிபதி பலம் பெற வேண்டும். புதன் பலமாக இருந்தால் கம்ப்யூட்டர், கணக்கு ஆசிரியர் ஆகலாம். சூரியன், சந்திரன் சேர்க்கை, பார்வை கல்லூரி பேராசிரியர், எழுத்தாளர். புதன், செவ்வாய் சம்பந்தம் உடற்கல்வி ஆசிரியர். மூன்றாம் இடம் சூரியன் பலம், சம்பந்தம் பெற்றால் விஞ்ஞான ஆசிரியர். இசை, சங்கீத கலையில் ஆசிரியராக இருப்பார்.

                                                             
                                                           ஆடிட்டர்  கணக்கு
 


பி.காம்., எம்.காம்., அக்கவுண்டன்சி., C.A. படித்து ஆடிட்டராக, வங்கி பணி செய்ய லக்னாதிபதி பலம், ஐந்தாம் அதிபதி பலம், ஒன்பதாம் அதிபதி பலம். இத்துடன் மிக மிக முக்கியமாக கணக்கன் என்ற புதனின் பலம், ராசி  அம்சம் இரண்டு கட்டத்திலும் இருக்க வேண்டும். ஜாதகத்தில் கேந்திர, கோணங்கள் மிக முக்கியமானவை. இந்த இரண்டிற்கும் சூட்சுமமான தொடர்பு உள்ளது. 1, 5, 9 என்ற ஸ்தானங்கள், நாம் வாழ்க்கையில் முன்னேறுவதைக் குறிக்கும். அதிர்ஷ்டம், யோகம், பாக்கியம் எல்லாம் இந்த ஸ்தானங்களில் இருந்துதான் வரும். லக்கினம் அதற்கு ஐந்தாம் இடம் அறிவு, சிந்தனை.

ஒன்பதாம் இடம்தான் உயர்கல்வி, மற்றும் அனுபவிக்கின்ற யோகத்தை தரக்கூடிய பாக்கியஸ்தானமாகும். நான்காம் இடம் கல்வி. இந்த நான்காம் வீட்டிற்கு நேர் எதிர்வீடு பத்தாம் வீடு. இந்த பார்வைத் தொடர்புதான் ஒருவருக்கு கல்வி மூலம் தொழில் அமைவதைக் குறிக்கிறது. ஒன்பதாம் இடம் உயர்கல்வி இந்த இடத்திற்கு இரண்டாம் இடம் பத்தாம் வீடாகும். அதாவது உயர்கல்வி மூலம் வேலை, தொழிலில் பணவருவாயைக் குறிக்கும் இடம். ஐந்தாம் இடம் அறிவு, சிந்தனை, அதிர்ஷ்டம். அதற்கு நேர் எதிர்வீடு லாபஸ்தானம் எனும் பதினொன்றாம் இடம். இந்த பதினொன்றாம் இடம் பத்தாம் வீட்டிற்கு இரண்டாம் இடம். அதாவது வேலை, தொழிலில் நமக்கு லாபம், புகழ் ஆகியவற்றைத் தரும் இடம்.

இப்படி ஒவ்வொரு ஸ்தானத்திற்கும் நேரடியான, மறைமுகமான தொடர்பு இருப்பதுதான் ஜோதிடக் கலையின் மிக ஆச்சர்யமான விஷயமாகும். ஆகையால்தான் இந்த வீடுகளில் இருக்கின்ற கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கின்றபோது யோக அமைப்புகள் விருத்தியாகின்றன. 1, 4, 5, 9 ஆம் வீடுகள் இதன் அதிபதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பு, பார்வை பரிவர்த்தனை பெற்றால் அக்கிரகத்தின் இயல்பிற்கேற்ப கல்வியில் சாதனை செய்ய முடியும். ஐந்தாம் இடம், ஐந்தாம் அதிபதி வலுவாக ஆட்சி, உச்சம், கேந்திர, கோணங்களில் இருப்பது சிறப்பு. ஐந்தாம் வீட்டில் இருக்கும் கிரகங்களின் இயல்புபடி கல்வியில் சிறப்பு உண்டு. சூரியன், செவ்வாய், கேது போன்ற கிரகங்கள் இருந்தால் மருத்துவத்துறையில் கல்வி அமையும். ஐந்தாம் இடத்தில் செவ்வாய்  M.B.A. படிக்க முடியும்.


செவ்வாயுடன், புதன் சேர்ந்து இருந்தால் கம்ப்யூட்டரில் ஞானம் உண்டு. ஐந்தாம் இடத்தில் புதன் பலம் பெற்றால் கணக்கு, ஆடிட்டர், கம்ப்யூட்டர் சயின்ஸ்துறைகளில் உயர்கல்வி அமையும். ஐந்தாம் இடத்தில் பலம் மிக்க குரு வங்கியில் பணிபுரியும் யோகத்தை தருவார். குருபுதன் சம்பந்தம் ஏற்பட்டால் வக்கீல், வரி ஆலோசகராக இருக்க முடியும். மேலும் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியராக முடியும். ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் வலுவாக அமைந்தால் கலை, இயல், இசை, நாட்டியம், டைரக்‌ஷன், அரங்க அமைப்பு போன்ற கல்வியில் தொடர்பு வரும். ஐந்தாம் இடத்தில் ராகு சுபபலம் பெற்றால் எக்ஸ்ரே, ஸ்கேன், மருந்தாளுனர், சவுண்ட் இன்ஜினியர் போன்ற கல்வி அமையும். ஐந்தாம் இடத்தில் சனி, கேது இருக்க வேதாந்த விஷயங்களில் நாட்டம் செல்லும்.

மருந்து, ரசாயனம் சார்ந்த படிப்பு அமையும். இன்னும் இக்காலக் கல்வி அமைப்பின்படி கிரக சேர்க்கை, பார்வை மூலம் பலவிதமான உபதுணை படிப்புகள் ஏராளமாக உள்ளன. அரசு சார்ந்த உத்யோக படிப்புகள், தனியார் தொழில் சார்ந்த படிப்புகள், டெக்னிக்கல் கல்வி என்று நிறைய உள்ளது. எந்த கல்வியாக இருந்தாலும் 1, 2, 4, 5, 9 ஆகிய ஸ்தானங்கள், அதன் அதிபதிகள், புதன், குரு ஆகிய கிரகங்களின் பலம் மிகவும் முக்கியம். இதற்கடுத்தபடியாக கல்வி பயிலும் காலகட்டத்தில் நல்ல தசா புக்திகள் அமைய வேண்டும். ஏனென்றால் ஜாதகம் எத்தனை பலமாக இருந்தாலும் நடைபெறக்கூடிய நேரம், காலம் சாதகமாக இருக்க வேண்டும். இதற்கும்மேல் மிகமிக முக்கியமாக அவரவர் பிராப்த கர்மா என்று ஒன்று இருக்கிறது, அது நம்மை வழிநடத்திச் செல்லும்.



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328