Tuesday, November 15, 2022

சகடை யோகம் என்றால் என்ன ? இந்த யோகத்தினால் உண்டாகும் நன்மைகள் என்ன ? தீமைகள் என்ன ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் ஆர். இராவணன் BSC

0 comments

                           

சகடை யோகம் என்றால் அனைவரும் சகடையா? வண்டிச் சக்கரம் போல் வாழ்க்கை அமைந்து விடும் என்பார்கள்  அனைவரும்.

குரு நின்ற வீட்டிற்கு 6-8-ல் சந்திரன் இருந்தால் சகட யோகம் ஏற்படும். சகட யோகம் என்றால் வண்டிச் சக்கரம். சக்கரம் போல வாழ்வில் ஏற்றம் இறக்கம் ஜாதகருக்கு பலன் ஏற்படும்.

யரசரனின்றவதற்கிள மதியெட்டாகில் வஞ்சியே

செல்வங்குன்றி வகுத்த மந்தயோகந்தப்பும்

குருவுக்கு எட்டில் சந்திரன் இருப்பின் ஜாதகருக்கு பலவித துன்பங்கள் ஏற்படும்.

பொன்னுமம் புலிக்காறெட்டாகில்
எந்த நாளாகி லுந்தானிவனுக்கே யோக மில்லை

அகடி மன்னனுக் காறெட்டொடு
விதிகடிலாமதி எய்தியிருந்திடின்
சகடயோகமிதிற் தார்க்கெலாம்
விகட துன்பம் விறையு மரிட்டமே !

சீரே நீ குருவுக்கு வியமாரெட்டில்
செழு மதியுமதிலிருக்க சகட யோகம்
ஆரே நீ அமடு பயம் பொருளும் நஷ்டம்

குருவுக்கு 6-8-12-ல் சந்திரன் இருந்தால் சகட யோகம் பயம், பொருள் சேதம், நஷ்டம் ஏற்படும்.யாரடா தம்பி கோளய் ஆரானுக்கு கீரார் எட்டில்

பாரடா நிலவு நிற்க பயனிலா சகடயோகம்
கூறடா அழியும் செல்வம் குலப்புகழ் உற்றார்
பெற்றொர் வேறடா வெறுப்பர் துண்பம் வேரூன்றும் வாழ்
நாளெல்லாம் கதித்ததோர் ஆறெட்டாகில் கடினமாய் பலன் அற்பம்

குருவுக்கு 6-8-ல் சந்திரன் இருந்தால் சகட யோகமகும்.செல்வம், புகழ், குலப்புகழ், உற்றார், உறவினர்கள், பெற்றோர், அனைவரும் வெறுப்பர். வாழ்நாளில் துன்பத்தை அனுபவிப்பார்கள். லக்கினத்திற்கு 6-8ல் அதிக துன்பம் தரும்.  

( சந்திரனுக்கு 12-ல் குரு இருப்பின் அனபா யோகம் . குருவுக்கு 12-ல் சந்திரன் இருந்தால் சுனபா யோகம்)

குரு துர்ஸ்தானம் பெற்றாலும் சந்திரன் பெறக்கூடாது . என்பதை நாம் நன்குணர வேண்டும்.

லக்கினத்திற்கு 7-8-ல் இருந்து. இருந்து.இருவருக்கும் 6-8 ஆக இருந்தால் சகட யோகம் அதிகம் பாதிக்கும்.  

"மதியுயார் மறையாதக மதி தனக்கீராரெட்டில்
அதிபெரு குரு வேயெய் தாலவர் சுபர் வீடானாலும்
துதி பெரு பகை நீசத்திற்றோன்றிடவு பயக்கோலின்
விதி பெரு சுபராய்ச் சென்றவிடம் பகையுனுமால் செப்பே

சந்திரன் லக்கினத்திற்கு மறையாமலிருந்து. சந்திரனுக்கு 8-12-ல் குரு இருக்க. சுபர் வீடானாலும், பகை நீசமாக இருந்தாலும் .ஜாதகர் /ஜாதகிக்கு சென்றவிடங்களில் பகை ஏற்படும். 


சகட  யோகம் என்றால் கஷ்டம் மட்டுமேதானா என நினைக்க வேண்டாம். உச்சத்திற்கும் போகலாம். ஆனால் சரிவும் நிச்சயம்.

இதற்க்கு உதாரணமாக நடிகர் ராமராஜனின் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளலாம் . 

திரைப்படங்களில் ஒரு  கால கட்டங்களில் பெரும்புகழ் பெற்றார். பணம் புகழ் செல்வாக்கு அனைத்தும் இவரை தேடி வந்தது . இவரின் சகடயோக ஜாதக அமைப்பு  இவரை சரிவில் தள்ளிவிட்டது . 

                                           நடிகர் ராமராஜன் ஜாதகம் : 

                        

இவருடைய ஜாதகப்படி தனுசு லக்னம் . லக்கினாதிபதி கடகத்தில் உச்சம் அடைந்துள்ளார் . அதேசமயம் குருவிற்கு 6 ம் இடத்தில் சந்திரன் அதாவது லக்கினத்தில் சந்திரன் . இது சகடை யோகமாகிறது 

சகட யோக பங்கம்

"பூரண மதியானாலும் புதன் புகர் கூடினாலும்
காரண எருது கும்பம் கன்னி யாழ் மீனம்
நன்புத் தாரணி சுபாங்கிசத்தில்
சந்திரனிருந்திட்டாலும்
பாரினில் சகட யோகம் பாழ்படும் என்று சொல்வீர்

சகட யோகம் அமைந்தவர்களுக்கு வளர் சந்திரன், புதன், சுக்கிரன் கூடியிருந்தாலும், ரிசபம், கும்பம், கன்னி, மிதுனம், மீனம், கடகத்தில் சுப அம்சத்தில் சந்திரனிருந்தால் சகட யோகம் பங்கமாகும்.

உதாரணம்  முந்நாளைய பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் ஜாதகம் :


திரு. பண்டித ஜவஹர்லால் நேரு. இவரது ஜாதகத்தில் குருவுக்கு எட்டில் சந்திரன்.லக்கின கேந்திரத்தில் ஆட்சியுடன் சந்திரன். ஆறில் குருவும் ஆட்சி பெற்று இருக்கிறார். இதனால் சகட யோகம் பங்கம் ஆகி விட்டது. இதனால் புகழ் பெற்ற பாரதப் பிரதமரானார்.

சகட யோக ஜாதகத்தில் சந்திரன் கடகத்தில் ஆட்சியிலும், ரிஷபத்தில் உச்சத்திலும், குருவின் வீடான தனுசு, மீனத்திலும் இருக்க பெற்ற ஜாதகர்களுக்கு தீமைகள் விலகி “நன்மைகள்” ஏற்படும்,

                                                 ஜவஹர்லால் நேரு ஜாதகம் : 

“நறுமணம் தனுமீன் கன்னி நண்டுடன் எருது தண்டு, திறமுடன் சசியே நிற்கில் தீர்க்கமாம் சகடபின்னம்”

பொருள்:- சந்திரன் தனுசு.மீனம். கன்னி. கடகம். ரிஷபம்.மிதுனம். ஆகிய ராசிகளில் இருந்து “சகட யோகமாயின்” தீமைகள் குறைந்து நன்மைகள் ஏற்றப்படும் என்பதே பாடலின் பொருள்.சகட யோகம் என்ற ஒரு குறிப்பினை மட்டும் வைத்து இதனை படிக்கும் எவரும் அவரவர் ஜாதகத்தினை எடுத்து ஆய்வு செய்ய வேண்டாம், 

எத்தனையோ குறிப்புகளில் இதுவும் ஒன்று. இதற்கு மதிப்பு அவ்வளவே என்ற கருத்தை நிரூபிக்கவே மேலே இரு உதாரணங்கள் சொல்லப்பட்டுள்ளன.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Monday, November 14, 2022

ஜாதக பலனை சொல்லும்பொழுது லக்கினம் - ராசி - இவைகளில் எதை முதன்மையாக வைத்து பலன் சொல்லவேண்டும் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                  

ஒரு ஜாதகத்தை முதலில் பார்க்க துவங்கும் பொழுது லக்கினம் தான் முதன்மையாக கவனிக்க பட வேண்டும். ஏன் எனில் லக்கினம் உயிர் ஸ்தானம் மற்றும் விதி என்று அழைக்கப்படும். எந்த ஒரு ஜாதகரும் லக்கினம் மற்றும் லக்கின அதிபதி குணாதிசயங்களை தான் அதிகம் வெளிப்படுத்துவார்.

லக்கினமும், லக்கின அதிபதியும் எவ்வளவு சுப வலுவில் இருக்கிறதோ அந்த அளவு தான் ஜாதகரின் வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் அவ்வாறே நடைபெறும்.

ராசி என்பது உடல் மற்றும் மனதை குறிக்கும். சந்திரனின் இருப்பை வைத்து உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தையும், மன வலிமையையும் நிச்சயம் கணிக்க முடியும்.

லக்கினத்தின் அடிப்படையில் தான் தசா - புக்தி பலன்கள் காண முடியும். ராசியின் அடிப்படையில் தான் கோட்சார பலன்கள் காண முடியும்.

தசா புக்தியும், கோட்சாரமும் ஒரு ரயில் தண்டவாளத்தின் இரண்டு இரும்பு தூண்கள் ஆகும். எனவே தசா புக்தி இல்லாமல் கோட்சாரமும், கோட்சாரம் இல்லாமல் தசா புக்தியும் முழுமை பெறாது.

இறுதியாக லக்கினம் வலது கண், ராசி இடது கண். இரண்டும் நிச்சயம் நமக்கு தேவை.

ஆனால் பலன்கள் கூற முதலில் தசா புக்தி அமைப்பு தேவை. அதற்கு லக்கினம் தேவை. இரண்டாவதாக இந்த தசா புக்தியில், ஒரு குறிப்பிட்ட கோட்சார கிரக அமைப்பில் தான் ஜாதகருக்கு அந்த குறிப்பிட்ட பலன்கள் நடைபெறும்.

எனவே முதல் ரேங்க் லக்கினம், இரண்டாவது ரேங்க் ராசி. எனவே ஒரு தனி நபர் ஜாதகத்தில் இரண்டும் கவனிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

                                               


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, November 9, 2022

கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன ? இதன் நன்மை தீமைகளை கூற முடியுமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

                              

நிழல் கிரகங்கள் என அழைக்கப்படக்கூடிய ராகு - கேது கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டு தங்கி (18 மாதங்கள்) பலனை அளிப்பார்கள்.ராகு துலாம் ராசியில் இருந்தால் கேது மேஷம் ராசியில் இருக்கும்.

ராகு மகரம் இராசியில் இருந்தால் கேது கடகம் ராசியில் இருக்கும்.

ராகு - கேதுவிற்க்கு இடையேயான கற்பனை கோடு ராகு - கேது அச்சு என்று அழைக்கப்படும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்கள் இயற்கையாக மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் என்ற நேர் வரிசையில் நகரக் கூடியவை.

செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்கள் சில காலங்களில், வக்கிரகதியாக துலாம், கன்னி, சிம்மம், கடகம், மிதுனம் என்ற எதிர் வரிசையில் நகரும்.

ராகு - கேது அச்சு வின் சுழற்சி எல்லா காலங்களிலும் வக்கிரகதியாக, விருச்சிகம், துலாம், கன்னி, சிம்மம், கடகம் என்ற எதிர் வரிசையில் நகரும்.

நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்கள் இருந்தால் அவை கால சர்ப்ப தோஷம் எனப்படும்.

ராகு - கேது அச்சு வின் ஒரு பகுதியில், ராசி, டிகிரி, பாகை அளவுகளில் மற்ற ஏழு கிரகங்களும் அடங்கியிருக்கும்.

கால சர்ப்ப தோஷத்தை யோகமாகவும் கருதலாம்.

ராகு - கேது அச்சு வின் 2 பகுதிகளில் ஏதோ ஒரு பகுதியில் மற்ற 7 கிரகங்களும் அமையப் பெறலாம்.

அதன் அடிப்படையில் 2 விதமான யோகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

                                    

மேலே உள்ள படத்தில் ராகு - கேது அச்சுவின் சுழற்சி முறையில் ராகு வுக்கும் கேதுவுக்கும் இடையே 7 கிரகங்கள் உள்ளன. இவ்வித அமைப்பு உடைய ஜாதகம்

கால சர்ப்ப யோகம் உடைய ஜாதகமாக கருதப்படுகிறது.

மேலே உள்ள படத்தில் ராகு - கேது அச்சு வின் சுழற்சி முறையில் கேது வுக்கும் ராகுவுக்கும் இடையே 7 கிரகங்கள் உள்ளன. இவ்வித அமைப்பு உடைய ஜாதகம்

கால அமிர்த யோகம் உடைய ஜாதகமாக கருதப்படுகிறது.

இந்த கால சர்ப்ப / அமிர்த யோகமுள்ள ஜாதக அமைப்பில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையின் முற்பகுதியில், சுமார் 36 ஆண்டுகளுக்கு, சில தடைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

பிற்பகுதி வாழ்க்கை சிறப்பான யோக காலமாக அமையும்.

பல செல்வந்தர்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள் இவ்வகையான கால சர்ப்ப / அமிர்த யோகம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது ஜாதகர் கால சர்ப்ப யோகம் உடையவராக இருந்தால் வாழ்க்கை துணையின் ஜாதகம் கால அமிர்த யோகம் அமையப் பெற்று இருப்பது சிறப்பாக இருக்கும்.

கால அமிர்த யோகம் உடைய ஜாதகருக்கு கால சர்ப்ப யோகம் ஜாதகம் அமையப் பெற்ற வாழ்க்கை துணை சிறப்பாக பொருந்தி வரும்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328